Saturday, September 28, 2019

சிறைபிடிப்பு!


https://www.facebook.com/dhanabalan.geetha/videos/10217219279007788/?t=0

சிறைபிடிப்பு!
தோழி உடன் வரவில்லை என வருத்தத்துடன் தனியாக நடந்தேன்! கவலைப்படாதே நீ போகும் தூரம் வரை உடன் வர நான் இருக்கிறேன் என்று கூடவே வந்தாள் அவள்! பேசிக்கொண்டே நடந்தோம். அனுப்பிய விக்ரம் நலமா என்றேன். புன்சிரிப்பு ஒன்று மட்டும் உதிர்த்து கூடவே அமைதியாய் நடந்தாள்! விடவில்லை நானும். ஏன் அவனை சிறைபிடித்தாய் என்றேன்.” பெண் என்றும் பாராமல் , என் அனுமதி இன்றி என்னை அணு அணுவாய் படம் பிடிக்க எதற்காக வந்தான்? அவனுக்கு சொந்தமில்லா என்னை படம் பிடிப்பது மட்டுமல்லாது அதை இந்த உலகிற்கே வெட்ட வெளிச்சம் போட்டு காட்ட ஏன் நினைத்தான்? உங்கள் பூமியில் வேண்டுமானால் ஒருவரின் உத்தரவு இன்றி படம் எடுத்து போடுவது சகஜமாக இருக்கலாம் ஆனால் எங்கள் இடத்தில் அது இழிவான செயல்,” என்றாள். அவளும் பெண் தானே! அவளின் சுதந்திரத்தில் தலையிடுவது தவறு என்பதை உணர்ந்த பின் அவளுக்கு பதில் ஏதும் கூறமுடியாமல் அமைதியாக நடந்தேன்! விக்ரமின் விமோச்சனம் யார் கையில் என்பது பிடிபடவில்லை! வீடுவரை கூட நடந்து வந்த அவளை வீட்டிற்குள் அழைக்க கோடி ஆசை இருந்தும் அவளை வாசலிலேயே விட்டு விட்டு தனியாக வீட்டிற்குள் சென்று கதவிற்கும் மனதிற்கும் தாழ்பாழ் இட்டு சன்னல் வழியே அவளை பார்வையாலே வழி அனுப்பி வைத்தேன்!

இட்லி உப்புமா




மல்லிப்பூ நிறத்தில்
தூய்மையாய்
இட்லியாய்
பிறப்பெடுத்தேன்!
நாள் ஆக ஆக
குளிரில் சிறை வைக்கபட்டு
அனலில் தாளிக்கப்பட்டு
பலரால் நிந்திக்கப்பட்டு
சிலரால் புகழப்பட்டு
கடைசியில்
உப்புமாவாய் உதிர்ந்தேன்....

முயல் அம்மா! கொம்பு மான் அப்பா!




Image may contain: coffee cup and indoor
அமைதியான முயல் அம்மா!
குத்திக்கிழிக்கும் கொம்பு மான் அப்பா!
புல்லின் அழகை ரசித்து குட்டிகளுடன் பகிர்ந்து உண்ண காத்துகிடக்கும் அம்மா முயல்!
கிடைத்ததை உடன் விழுங்கும் அப்பா மான்!
அழகிய சந்தன நிறம் அம்மா முயலுக்கு!
அவளின் மீது வீசும் வாசம் போல்!
அடர்ந்த சாம்பல் நிறம் அப்பா மானுக்கு!
அவரின் கடுமையான கண்டிப்பை போல்!
உச்சி முதல் பாதம் வரை பூக்களின் ஆக்கிரமிப்பு அம்மா முயலுக்கு!
அவளின் மனம் போல!
உடல் முழுதும் நிரம்பி வழிகிறது
உண்ட இலை தழைகள் அப்பா மானிற்கு!
அவரின் தேவை உணர்த்த!
பிகு:இதில் எந்த உள்குத்தும் இல்லை! கோப்பைகள் பார்த்த பொழுது தோன்றியது அவ்வளவு தான். நினைவிற்கு வந்த பாடல் வரிகள் இதோ:
“கடவுள் அமைத்து வைத்த மேடை
இணைக்கும் கல்யாண மாலை
இன்னார்க்கு இன்னார் என்று
எழுதி வைத்தானே தேவன் அன்று....”
Make அப்படி இதில் யாரை குறை கூறமுடியும்.....