Saturday, February 1, 2020

துளசி செடி

பாட்டி தோட்டத்தில்
துளசி செடி வளர்த்தாள்!
தோட்டத்தை சுற்றி சுற்றி
வந்தாள்
நற்காற்றினை
சுவாசிக்க !
அம்மா தொட்டியில்
வைத்து துளசியை வளர்த்தாள்!
மாடம் ஒன்று கட்டி
அதில் துளசியை
கொலுவேற்றி
தான் வணங்கும்
அம்மனென
சுற்றி வந்தாள்!
என் வீட்டிலோ
துளசி மாடத்தின்
மாதிரி மட்டுமே!
பாட்டி சாணம் தெளித்த
மண் வாசல் முழுதும்
நம் மனம் சிக்கிக்
கொள்ளும் அளவு
சிக்கு கோலம்
போட்டாள்!
அம்மா தன் சின்ன வாசலுக்கு
சிமெண்ட் பூசி
அதில் வண்ண கோலம்
போட்டாள்!
நானோ சின்னஞ்சிறு
டைலில் அடக்கமாய்
ஒரு கோலம் போட்டேன்
அதுவும்
தோன்றும் போது மட்டுமே!!!
மக்கும் மண் அகல் விளக்கும்
இங்கு மக்கா
அலுமினிய மெழுகுதிரியாய்
உறுமாறியதே!
கால ஓட்டத்தில்
எப்படி எல்லாம்
சிக்கி தவிக்கிறோம்!

No comments: