Saturday, February 1, 2020

கூடல்

கூடல்
தன் இருப்பில் பொத்தி
வைத்திருந்த
அத்துனை காதலையும்
மழை காதலன்
பொழிய துவங்கி விட்டான்!
முதலில் ஆசையுடன்
பூமி காதலியை
மெது மெதுவாய்
முத்தமிட்டான்!
அவன் அழுத்தி பதித்த
முத்த சுவடுகள்
மங்கை அந்த மண்ணில்
கண்ணக்குழியாய்
பதிந்து கிடக்க,
அவள் முகம் சிவந்து
காதல் மணம் வீச
அவனுக்கோ மோகம்
தலைக்கேற
கட்டுக்கடங்கா தன்
காதலை மொத்தமாய்
சட சட என பொழிய
அத்துணை காதலையும்
அடைத்து வைக்க
முடியாதவளாய்
வெள்ளமாய்
ஓடவிட்டாள்!
காற்றாட்டு வெள்ளமென
ஓடிய காதல்
பாய்ந்த இடமெல்லாம்
பரவசமாய் ஆக்கி சென்றது....
மழைக் காதலனும்
மண் காதலியும்
கூடும் நேரம்
ஊர் எங்கும்
காதல் மணம் வீசும்....

No comments: