Saturday, February 1, 2020

காத்திருத்தல்

காத்திருத்தல்
ஒரு காலத்தில் காத்துகிடத்தல் அழகாக இருந்தது. விருந்தினரின் வருகை, பள்ளி திறப்பதற்கான காத்திருத்தல்,புது உடை வாங்க காத்திருத்தல், அதை உடுத்திக்கொள்ள காத்திருத்தல், நண்பர்களின் அழைப்பு, வாரம் ஒரு முறை வரும் தொடர் கதைகளுக்கான காத்திருப்பு,தொலைகாட்சியில் வாரம் ஒரு முறை வரும் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சி, இப்படி காத்திருப்பது என்பது ஒரு வித ஆச்சரியம் , சஸ்பென்ஸ் , ஆசை, எதிர்பார்ப்பு , ஆவல் என்று பலவிதமான உணர்வுகளின் கலவையாக இருந்தது.
இன்றோ எல்லாமே விரல் சொடுக்கும் நேரத்தில் விரல் நுனி கொண்டு நிவர்த்தி செய்யப்படுகிறது. காத்திருத்தலினால் இருக்கும் மதிப்பு போய் இப்பொழுது காத்திருப்பு என்பது ஒரு எரிச்சல் தரக்கூடிய நிகழ்வாகி போனது. Instant food, Instagram, என்று எல்லாமே உடனுக்குடன் நிகழ வேண்டும் என்ற எதிர் பார்ப்பே எல்லோரிடமும்.
பொறுமை ஆக இருந்தால் எருமை மேய்க்க கூட லாயக்கற்றவர்களாக ஆக்கப்பட்டு விடுவோம் போல் இருக்கிறது. குழந்தைகள் ஆசை பட்டதை எப்படியும் செய்ய வேண்டும் என்ற பெயரில் இதை நம் அடுத்த தலைமுறையினருக்கும் கடத்தி விட்டோம். பொறுமை, நிதானம், காத்திருத்தல் எல்லாம் என்ன விலை என்றாகிவிட்டது.....

No comments: