Tuesday, March 26, 2019

மகளீர் தின வாழ்த்துக்கள்

மகளீர் தின வாழ்த்துக்கள் குவிகின்றன! வாழ்க்கையெனும் சக்கரம் ஒழுங்காக ஓட மகளிர் என்ற அச்சாணி ஒவ்வொருநாளும் தேவை எனும்பொழுது இன்று மட்டும் என்ன புது கொண்டாட்டம்? எங்களை வாழ்த்த வேண்டாம். தினம் தினம் இப்படி செய்தாலே எங்களை கொண்டாடுவதாக அர்த்தம்:
1. எழுந்தவுடன் உங்கள் படுக்கையை சரி செய்யுங்கள்.
2. சவரம் செய்து (மறக்காமல் நறுக்கி கொட்டிய மீசை முடியெல்லாம் துடைத்து )குளித்து முடித்து விட்டு குளியல் அறையை விட்டு வரும்பொழுது தண்ணீர் ஊற்றி விட்டு வாருங்கள் அப்பொழுதுதான் நாங்கள் உள்ளே நிம்மதியாக அருவருப்பின்றி உங்களை திட்டாமல் உள்ளே அடியெடுத்து வைக்க முடியும். மறக்காமல் டாய்லெட்டை உபயோகபடுத்தும் ஒவ்வொரு முறையும் ஃfலஷ் செய்துவிட்டு ஒரு நிமிடம் காத்திருந்து தேவைப்பட்டால் மறுமுறை ஃfலஷ் செய்து விட்டு வரவும். தண்ணீர் செலவாகிறதே என்ற கவலை வேண்டாம்.
3. சாப்பிட்டப்பின் தட்டை கழுவும் இடத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி
போடவும். அதற்கு முன்னர் தட்டில் இருக்கும் மீச்சம் மீதியை குப்பையில் போடவும். 
4. காப்பியோ டீயோ குடித்துவிட்டு அப்படியே இருக்கும் இடத்திலேயே காயவிடாமல் கழுவும் இடத்தில் தண்ணீர் ஊற்றி போடவும்.
4. ஈற துண்டை படுக்கையில் போடாமல் காய வைக்கவும். 
5. சமைத்து வைத்திருப்பதை குறைகூறாமல் சாப்பிடவும்.
6. அழுக்கு துணியை தரையிலோ படுக்கையிலோ போடாமல் அழுக்குதுணி கூடையில் போடவும். அதுவும் நல்ல பக்கம் வெளியில் இருக்குமாறு. இல்லையேல் நாங்கள் எங்கள் கையை அந்த அழுக்கு துணியில் நுழைத்து திருப்ப வேண்டி இருக்கும். 
7.கை கழுவுமிடத்திலோ அல்லது வேறு எங்கு வாய்க் கொப்பளித்தாலும் சிறிது தண்ணீர் ஊற்றி சுத்தமாக வைத்து விட்டு வரவும். இல்லை என்றால் அடுத்து வருபவர்களுக்கு குமட்டிக் கொண்டு வரும்.
8.சாயங்காலம் வீடு வந்த பின் ஒரு ஐந்து நிமிடங்கள் எங்களுடன் செலவு செய்யுங்கள். அதற்கு மேல் எங்களுக்கே பொறுமை இருக்காது. 
9. ஒரு அறையில் இருந்து வெளிவரும் பொழுது லைட், ஃபேன் , ஏசி எல்லாவற்றையும் அனைத்துவிட்டு வரவும்.
10. பேப்பர் படித்துவிட்டு மடித்து வைக்கவும். எங்களுக்கு வேண்டுமென்றால் நாங்களே பிரித்து படித்துக்கொள்வோம்.பெறும்பாலும் எங்களுக்கு சப்பாத்தி பூரி சுடத்தான் அவற்றின் தேவை இருக்கும்.
12. நாங்கள் சீரியல் பாக்கும் பொழுது செய்தி பார்க்க வேண்டும் என்று வம்பு செய்யாதீர் . எப்படியும் பல சேனல்களிலும் ஒரே செய்தியைத்தான் விடிய விடிய கூவுவார்கள். 
13. எதை திறந்தாலும் ஒழுங்காக மூடுங்கள்.
14. எடுத்ததை எடுத்த இடத்தில் வைத்துவிடுங்கள்.
இவற்றை தினம் தினம் செய்தாலே எங்களுக்கு கொண்டாட்டம் தான். இவை மறந்து போகுமானால் எழுதி வைத்து தினமும் பார்த்து மனதில் பதிய வைத்து நடைமுறை படுத்தவும்.

Mom and Rishi

Mom and Rishi
Mom: Rishi your breakfast is ready. Come and have it.
Rishi comes to the table and sees a new bowl .
Rishi: Mama what is this new revolutionary bowl in the morning
Mom: Ya its a new bowl.
Rishi takes a spoonful of the content in the bowl. shoves it in his mouth .Then with a sigh,
Rishi: I wish there was new stuff in the new revolutionary bowl. But I am disappointed seeing the same old cereal in the new bowl..........
Mom: Do you want to eat what is served in papa's bowl?
Rishi peeps into the bowl kept for papa.
Rishi: Oh no thanks. That is the old soaked rice with yogurt and some stuff right? I prefer the cereal.
Mom keeps doing her work as if she cannot hear .........
Lesson learnt: When you serve two unrelishable stuff ,Rishi has no choice but to choose one among them. It is just like the choice between two devils........

Guardian angel !

Guardian angel !
As I walked past the bus stop,
the sight of a frail old woman
caught sight of my eyes.
She must be in her early seventies.
She looked fragile and transparent like a glass.
Fair , wrinkled skin covered her
smiling face!
Clad in pure white shirt
with few calming blue lines
which ran across vertically!
She wore dark grey trousers
which were too loose to hold
her long thin legs.
Her hair had a few streaks of black too,
To show the contrast between white and black!
Her nose was in a straight line
as if to denote a certain angle!
Thin pale lips were held tight
not to show a missing tooth within!
A black handbag was hanging
over her not so strong shoulder!
Her bent fingers held a phone with care
so as not to drop it even with a gentle blow of the wind!
While Scrolling through the screen
her eyes looked bright and excited
Was she playing a game?
or was she reading a poem?
or was she checking the arrival time of the bus?
Or did her children send the pictures of her grandchildren?
I couldn't guess what made her so happy.
Though the screen engulfed her attention
she was also ready to lift her head
to see what her dear husband,
who was sitting in the bus stop doing.
He was sitting there quietly
looking around like a child !
Waiting to be instructed by his loving wife
he sat there with his palms rested on the seat!
His eyes spoke that she was his guardian angel!
She saw the arriving bus and
shoved the phone into her handbag.
Shook her head as a signal to say
That was the bus they were waiting for.
He looked at her and pressed his palms strong on the seat,
Lifted his not so cooperative body
and walked slowly towards the bus.
She waited for him to get in first
and then got into the bus.
The bus drove past me .
Then did I realize that she had left
A lasting memory within me.........

Wednesday, March 20, 2019

எவ்வளவு?? எவ்வளவு??

எவ்வளவு?? எவ்வளவு??
பன்னிரெண்டாம் வகுப்பு பரீட்சை எல்லாம் முடிந்தாகி விட்டது. இனி எல்லா பெற்றோரும் பரீட்சை முடிவிற்காக காத்திருக்க ஆரம்பித்து விடுவார்கள். படித்து பரீட்சை எழுதிய பிள்ளைகள் பரீட்சை முடிவிற்காக காத்திருக்கிறார்களோ என்னவோ பெற்றோர்கள் ஆவலுடன் எதிர் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர் மட்டுமா எதிர்பார்பார்கள். உற்றார் உறவினர், அக்கம் பக்கத்து ஆண்டி அங்கிள்கள் என்று சுற்று வட்டாரமே எதிர்பார்க்கும். அப்பாடா முடிந்தது சனி என்று பிள்ளைகள் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள். முடிவு என்னாகுமோ ஏதாகுமோ என்று லப்டப் லப்டப் என்று அடிக்க ஆரம்பிப்பது பெற்றோர்கள் இதயமே. ஏனென்றால் அவர்கள் பல பேருக்கு பதில் சொல்ல வேண்டி இருக்குமே. உன் பிள்ளை எவ்வளவு மதிப்பெண் என்று எல்லோரும் கேட்கப்போகும் கேள்விக்கு தலை நிமிர்ந்து பதில் சொல்வதற்காவது தன் பிள்ளை நிறைய மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்று டென்ஷனோடு வலம் வருவார்கள்.
ஒரு முறை பள்ளி பரீட்சை முடிந்து மதிப்பெண்கள் வாங்கி வந்த என் மகளிடம் அவள் மதிப்பெண்களை பார்த்துவிட்டு அதோடு என் திருவாயை மூடாமல்,” உன் மற்ற தோழிகள் எவ்வளவு மதிப்பெண்கள் எடுத்து இருக்கிறார்கள்?” என்று கேட்டு விட்டேன். உடனே அவள் சூடான சட்டியில் இட்ட சோளமாய் பொரிந்து தள்ளி விட்டாள். “ அவர்கள் எவ்வளவு வாங்கி இருந்தால் உங்களுக்கு என்ன? அது எவ்வகையில் உங்களுக்கு முக்கியமானது? என் மதிப்பெண் எவ்வளவு என்று கேட்க உங்களுக்கு உரிமை உண்டு, என் தோழிகளின் மதிப்பெண்களைப்பற்றி கேட்க உங்களுக்கு உரிமையும் இல்லை நீங்கள் அதை கேட்கவும் கூடாது . அப்படியே கேட்டாலும் நான் கூற மாட்டேன்,” என்று பதில் கேள்விகளால் என்னை துளைத்தெடுத்து விட்டாள். நானும் யுத்தத்தில் புறமுதுகு காட்டியவளாய் ஓடி ஒளிந்து விட்டேன்.
சில மாதங்கள் கழித்து என் தோழி ஒருவரின் மகன் பள்ளி கடைசி வருடம் தேர்ச்சி பெற்றான். என் தோழி எனக்கு தொலைபேசியில் அழைத்து மகிழ்ச்சியுடன் அந்த செய்தியை பகிர்ந்து கொண்டாள். நான் பேசிக்கொண்டிருந்த பொழுதே என் மகள் சைகையில் அவர்களிடம் அவர்கள் மகன் எவ்வளவு மதிப்பென்கள் என்று கேட்காதே என்று கூறினாள். நானும் அதனை புரிந்து கொண்டு ஒன்றும் கேட்கவில்லை. பேசி முடித்து தொலைபேசியை வைத்தப்பின்,” அம்மா எங்கே அவர்கள் மகன் எவ்வளவு மதிப்பென்கள் எடுத்து இருக்கிறான் என்று நீங்கள் கேட்டு விடுவீர்களோ என்று நான் பயந்து கொண்டே இருந்தேன் . நல்ல வேளையாக நீங்கள் கேட்க வில்லை. யாரிடமும் அவர்களின் பிள்ளை எவ்வளவு மதிப்பென் பெற்றிருக்கிறார் என்று கேட்காதீர்கள். அது நாகரீகமான செயல் இல்லை. அவர்களாக கூறினார்கள் என்றால் கேட்டுக்கொள்ளுங்கள் இல்லை என்றால் அமைதியாக வாழ்த்துக்கள் என்று கூறிவிட்டு வைத்து விடுங்கள். அவர்கள் பிள்ளை சரியாக மதிப்பெண்கள் வாங்கவில்லை என்றால் அது அவர்களுக்கு எவ்வளவு தர்ம சங்கடமாக ஆகிவிடும், ‘என்று கூறினாள். அவள்்கூறிய வார்த்தைகளில் ஆழ்ந்த அர்த்தமும் நியாயமும் இருந்தபடியால் அன்றிலிருந்து நான் யாரிடமும் அவர்களின் பிள்ளைகளின் மதிப்பெண்களை கேட்பதில்லை.
எவ்வளவு மதிப்பெண்கள் எடுத்தாலும் தன் பிள்ளைக்கு என்ன செய்ய வேண்டும் என்று அவர்தம் பெற்றோருக்கே தெரியும். அடுத்தவர் பிள்ளைகளின் மதிப்பெண்களைப்பற்றி கேட்டு நம் மதிப்பினை குறைத்து கொள்ளாமல் இருக்க நாம் பழக வேண்டும். அடுத்தவரை தர்ம சங்கடத்திற்கு ஆளாக்காமல் , அடுத்தவர்களின் பிள்ளைகளின் விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் நம் வேளையை பார்க்க கற்றுக்கொள்ளவேண்டும். இதுவே சமூகம் என்ன சொல்லும் என்று பல பெற்றோர்கள் கவலை அடையாமல், தன் பிள்ளைகள் மேல் தங்களின் மன அழுத்தத்தை செலுத்தாமல் பிள்ளைகளுடன் இனக்கமாக , அமைதியுடன் பரீட்சை முடிவுகளை எதிர் கொள்ள வழிவகுக்கும் என நான் நம்புகிறேன்.

Friday, March 15, 2019

Rishi and Mom

Rishi and Mom
Rishi had to leave home very early today. Last night when he told this to mom , she made her meal plan and made the preparation half way. Next day she woke up early and made the breakfast and packed lunch for Rishi. Rishi got ready and came to the dining table to have his breakfast.
Rishi: Mama what's for breakfast?
Mom: Just wait for few minutes Rishi. I have made quiche and it is in the oven. will be ready in two minutes.
Whenever he had to leave early and when mom made idly or dosa and asked him to wait for few minutes he would say "it's ok I can get something in school canteen." Today he got fascinated by the name.
Rishi: Ok mama I can wait for it to cool.
Mom took the quiche out of the oven and with much difficulty transferred it to a plate, because it was still too hot and was about to crumble. She didnt have time to let it cool and then served. With much expectation Rishi tasted the quiche.
Rishi: Mama did you call this as the quiche?
Mom: Yes Rishi. How does it taste?
Rishi: Mama you could have just told me you were making egg omelette instead of giving it some fancy name.
Mom got very disappointed .
Mom: Rishi, this is how the recipe said it should be made.
Rishi: it tastes exactly like an omelette. Are you sure you followed the recipe correctly. I think it should have some pastry crust at the bottom as the base.
Mom: Ya may be I should have added a few bread pieces to it. I thought I would make the healthier version without the pastry base.
Rishi:..... Ma........ Ma why do you always try to add some healthy factor to the yummiest food. Next time either you make it the original way or just don 't make it . Please don't make it like this and make it sound very fanciful. A Quiche should be like a Quiche and taste like a Quiche and not like an Omelette.
With much disappointment Rishi left to school taking his lunch box which had another healthy version of Pasta. Mom is waiting for him to come and give her his life lesson about the pasta in the evening........

நம்பிக்கை





நம்பிக்கை
வாழ்க்கையே நம்பிக்கை தானே! கருவில் வளரும் குழந்தை நலமாக , சந்தோஷமாக உலகில் வலம் வரும் என்ற நம்பிக்கையில் தான் ஒவ்வொரு தாயும் தன் குழந்தையை ஈன்றெடுக்கிறாள். அந்த நம்பிக்கை இல்லாவிடில் பல உயிர்கள் கருவிலேயே மடியும். இதில் ஆண் பெண்னென எந்த பேதமும் இல்லை.
யுத்தம் அழித்த மண்ணில் இன்னும் மானுடம் வாழ்வதும் ஏதோ ஒரு நம்பிக்கையில் தான்.வெளி விடும் மூச்சை அடுத்த நொடி உள்ளிழுக்க முடியும் என்ற நம்பிக்கையில் தான் மனிதன் வாழ்க்கை ஓடுகிறது. பெற்ற குழந்தை ஒழுங்காக வளரும் என்ற நம்பிக்கை, வெளி சென்ற கணவன் நலமாக வீடு திரும்புவான் என்ற நம்பிக்கை, நோய் கொண்ட உடம்பு நலமாகும் என்ற நம்பிக்கை, தவறு செய்தோர் திறுந்துவார் என்ற நம்பிக்கை, கருத்த மேகம் மழை பொழியும் என்ற நம்பிக்கை, புயலுக்கு பின் அமைதி வரும் என்ற நம்பிக்கை, மழித்த தலையில் மீண்டும் முடி வளரும் என்ற நம்பிக்கை, விதைத்த விதை செடியாக வளரும் என்ற நம்பிக்கை, இப்படி நம் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் நம்மை வழி நடத்துவது நம்பிக்கை மட்டுமே. இந்த நம்பிக்கையை மட்டும் நாம் கைவிட்டால் வாழ்வு மட்டுமல்ல இவ்வுலகமே சூன்யமாகிவிடும்.
இவ்வுலகில் நல்ல மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். நல்ல விஷயங்கள் தினம் தோறும் நடந்தேறிக்கொண்டுதான் இருக்கிறது. நாம் எதன் மீது ஈடுபாடு கொண்டுள்ளோம் என்பதை பொருத்தே அமைகிறது நம் வாழ்க்கை. நாம் எதை சுகிக்க வேண்டும் எதை ரசிக்க வேண்டும் எதை ஒதுக்கி தள்ள வேண்டும் என்பதனை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். குழந்தையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதா இல்லை கொடூரனின் குதூகளிப்பை பார்த்து ரசிப்பதா என்பது நம் மனதை பொருத்தது.
எனக்கு இவ்வுலகின் மேல் நம்பிக்கை இருக்கிறது. மூன்றாம் உலக யுத்தம் வராது என்ற நம்பிக்கை இருக்கிறது. மீண்டும் எம்மண்ணில் இருக்கும் ஏரி , குளம் யாவும் நிரம்பும் என்ற நம்பிக்கை இருக்கிறது. என் நண்பர்கள் மேல், உறவுகளின் மேல் நம்பிக்கை இருக்கிறது. என்னை சுற்று நடக்கும் நல்லவற்றை காந்தமாக் இருந்து நான் இழுத்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மாசற்ற காற்றும், செழிப்பான மண்ணும், கலங்கமில்லா மனமும் கொண்ட மனிதர்கள் வலம் வருவர் எங்கெங்கும் என்ற நம்பிக்கை எனக்கு இன்றளவும் இருக்கிறது.என்னுடைய இந்த எல்லா நம்பிக்கையும் நிஜமாக நான் என்ன செய்ய வேண்டும்? ஆம் என் நம்பிக்கை நினைவாக நான் முதலில் நல்ல தூய உள்ளம் கொண்ட மானிட ஜென்மமாக மாற வேண்டும். என்னை நானே மாற்றிக்கொள்ள என்னால் இயலவில்லை என்றால் வேறு எதையும் மாற்றவோ, எவரையும் மாற்றவோ எனக்கு எந்த தகுதியும் இல்லை. முதல் மாற்றம் நானாகவே இருக்க வேண்டும் . முயன்று தான் பார்க்கலாமே!