Wednesday, September 26, 2018

தொட்டாச்சிணுங்கி




தொட்டாச்சிணுங்கி
துழாவும் பார்வை
அனு அனுவாய்
துளைக்கும் போதும்,
சுடச் சுடச்
தீயினை கக்கும்
வார்த்தையினை
காதினிலே
கேட்கும் போது,
தேவையான நேரத்தில்
தேவையில்லா
அர்த்தமற்ற
மெளனம்
நிலவும் போதும்,
உரிமையில்லா
விரல் நுனி
உரிமையேந்தி
உரசும் போதும்,
கூனிக் குருகி
கூட்டுக்குள் நத்தையாய்
தன்னை சுருக்கிக் கொள்ளும்
ஒவ்வொரு பெண்ணும்
தொட்டாச்சிணுங்கி தான்.

Sunday, September 16, 2018

ஓவர் வெட்டி



இன்று ஞாயிற்றுக்கிழமை ஆகையால் காலை கணவரை மீன் வாங்க அனுப்பிவிட்டு மீன் குழம்பு வைக்க தேவையானவற்றை ஏற்பாடு செய்து கொண்டு இருந்தேன். சின்ன வெங்காயம் குழம்புக்கு வேண்டும் என்று உரித்தேன். அப்பொழுது திடீரென்று ஒரு ஞானோதயம் வந்தது. மேலே இருக்கும் வீடியோவை எடுத்தேன். ”ஓவர் வெட்டி” என்ற தலைப்பில் அதை ஒரு பத்து நண்பர்களுக்கு மேல் அனுப்பி வைத்தேன். எப்படித்தான் react செய்கிறார்கள் என்று பார்ப்போமே என்று. எவ்வளவு மொக்கை forward எல்லாம் நமக்கு வருகிறது. நாம் அடையும் இ(து)ன்பத்தை மற்றவரும் பெறட்டுமே என்ற அல்ப சந்தோஷம். என் விடியோவை பார்த்துவிட்டு ஒரு நாலு பேராவது கோபப்படுவார்கள் என்று பார்த்தால் எனக்கு ஏமாற்றமே. முக்கால்வாசிப் பேர் கண்ணில் தண்ணீர் வரும் அளவிற்கு சிரிப்பது போல் emoticon அனுப்பி இருந்தார்கள். விடியோவை ரசித்ததால் அதை அனுப்பினார்களா இல்லை, தாங்கள் ஏமாந்ததன் அடையாளமாக அனுப்பினார்களா என்று தெரியவில்லை. அவ்வளவு மொக்கையான வீடியோ என்று எனக்கே தெரியும். சிலர் சூப்பர் என்று வேறு அனுப்பி இருந்தார்கள். சிலர் அமைதியாக இருந்துவிட்டார்கள்.

சைவ நண்பர்கள்,”சட்னி செய்ய உரிக்கிறாயா?” என்று கேட்டார்கள்.அசைவ நண்பர்களோ,”மீனாட்சியா, காமாட்சியா?”என்று கேட்டார்கள். நாளை வேறு புரட்டாசி மாதம் பிறக்கிறது இல்லையா? நம் ஊரில் கறிக்கடை, மீன்கடைகள் கலைகட்டும். என்னவோ இன்று ஒரு நாள் சாப்பிடப்போகும் அசைவம் அடுத்த ஒரு மாத காலம் வரை அவர்கள் வயிற்றிலேயே தங்கிவிடப்போவது போலவும், அந்த ருசி ஒரு மாதத்திற்கு நாக்கிலேயே இருப்பது போலவும் ஒரு நினைப்பு.

ஒரு சில அப்பாவி நண்பர்கள்,”வெங்காயத்தை நீ உறிக்கும் முன்பே தண்ணீரில் போட்டு எடுத்து உறித்தால் கண்களில் கண்ணீர் வராது,”என்று tips கொடுத்தார்கள். என் அம்மா அப்படித்தான் செய்வார்கள். எனக்கு அது பிடிக்கவே பிடிக்காது. உறிக்கும் பொழுது அந்த தோல் என் விரல்களில் ஒட்டிக்கொள்வது எனக்கு பிடிக்காது. என் அம்மாவிடம்,”ஏம்மா வெங்காயத்த உரிச்சுட்டு தண்ணில கழுவலாம்ல எதுக்கு தண்ணில போட்டு உறிக்க சொல்ற,”என்று கேட்டால் அதற்கு அவர்,”அத எங்க எங்க கொட்டி அள்ளிட்டு வராங்களோ? அந்த திருவள்ளுவர் தியேட்டருக்கு பின்னாடி எல்லாம் அந்த அழுக்குள கொட்டி வச்சு இருக்கறத பாத்து இருக்கேன், கருமம். நீ நான் சொல்ற மாதிரி செய், “என்பார்கள். அந்த காலத்தில் நம் ஊர் திரையரங்குகளுக்கு பின் இருக்கும் சுவர் எதற்கு என்று உங்களுக்கே தெரியும். இன்றும் வெட்டவெளி கழிப்பிடம் என்பது நமது நாட்டின் பிறப்புரிமை மாதிரி. காய்கற்களின் சுத்தம் பற்றி நமக்கு இப்போ அந்த கவலையே இல்லை . எங்கு கொட்டி எப்படி அள்ளுகிறார்களோ நமக்கு எல்லா காய்கற்களும் makeup போட்டு தான் கடைகளில் கிடைக்கிறது. அந்த makeup நஞ்சா இருந்தாலும் இல்லையென்றாலும் கவலையில்லை. அந்த பளபள makeupற்கு நாம் மயங்கி விடுகிறோம்.

என் மகள் விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த போது நான் கோழிக்கறியை கழுவுவதை பார்த்துவிட்டு,”அம்மா என் தோழிகள் எல்லாம் இப்படி கழுவவே மாட்டாங்க. அப்படியே packet la இருக்கற chicken எடுத்து சமைப்பாங்க. நான் கேட்டப்ப அந்த chicken எல்லாம் நல்லா கழுவி pack பண்ணது கழுவவேண்டிய அவசியம் இல்ல. அப்படி கழுவுனா kitchen sink எல்லாம் bacteria ஒட்டிக்கும்னு சொன்னாங்க,”என்றாள். அது என்ன logic என்று எனக்கு புரியவில்லை. எனக்கு அதை கேட்டவுடன் குமட்டிக்கொண்டு வந்துவிட்டது.”நீ சமைக்கும் போது ஒழுங்கா கழுவிட்டு சம சரியா,”என்றேன். என் அம்மா மீன் கழுவுவதை பார்த்துவிட்டு என் அப்பா,”உங்க அம்மா மீன கழுவு கழுவுனு கழுவி அதோட வாசத்தையே எடுத்துட்டு கத்திரிக்கா மாதிரி ஆக்கிடுவா,”என்பார். பாட்டி அப்படி, பேத்தி இப்படி!!

சில நண்பர்கள்,”சைனாவிலிருந்து வரும் genetically modified வெங்காயத்தை உறிக்கும் பொழுது கண்ணீரே வராது,”என்றார்கள். ஒருவர் கூட “உனக்கு வேற வேலையே இல்லையா, இப்படி வெட்டியா ஒரு வெங்காயத்த உறிக்கறத வீடியோ எடுத்து போடுறியே போடீ வெங்காயம்,”என்று என்னை திட்டவே இல்லை.

என் நெருங்கிய தோழியிடம் “சுஜா, ஒருத்தர் கூட வீடியோவை பாத்துட்டு திட்டலடி, எல்லாரும் சிரிக்கற மாதிரி emoticon அனுப்பி இருக்காங்கடி. அவ்வளவு வெட்டியாவா இருக்காங்க எல்லோரும்?” என்றேன். அதற்கு அவள்,”நீ வெட்டியா அனுப்பின வீடியோவ பாத்துட்டு ஒனக்கு பதில் அனுப்பினவங்கள வெட்டியா இருக்காங்களானு கேக்கறியே, அவங்க அனுப்பின பதில பத்தி இப்போ இவ்ளோ நேரம் discussion பண்ற நானும் நீயும் எப்படிப்பட்ட வெட்டியோ வெட்டி ராணிகள்னு ஒனக்கு புரியுதா? இப்படிதான் பல பேர் திரியராங்க. கவலப்படாத. ,”என்று நச்சென்று நடுமண்டையில் வார்த்தைகளால் கொட்டினாள்.

எப்படி உரிக்க உரிக்க வெங்காயத்தில் ஒன்னும் இல்லாமல் போகிறதோ அப்படித்தான் வேண்டாத பல விஷயங்களை கைதொலைபேசியிலும், சமூக வளைதளங்களிலும் பார்க்க பார்க்க நம் மூளைக்கும் சிந்திக்கும் திறன் இல்லாமல் போகிறது. அதோடு இல்லாமல் நாம் தேவையில்லாமல் உரித்து உரித்து போடும் நேரமும் விரயமாகிறது.......கடைசியில் நமக்கே தெரியாமல் காலாவதியான காலத்தை நினைத்து நமக்கு மிஞ்சுவது கண்ணீரே....

Friday, September 14, 2018

ஆசை 1


Image result for pottery making pics

ஆசை 1
பிள்ளையார் சதுர்த்தியும் வந்து போய்விட்டது. பிள்ளையாருக்கு வீடு தோறும் இன்னும் இரண்டு நாட்களுக்கு ராஜ உபசாரம் நடக்கும். பிறகு அவரையும் கரைத்து விடுவார்கள். கரையாதவர்கள் மனிதர்கள் தான்--மனதளவில் .
களிமண் பிள்ளையாரை பார்க்கும் பொழுது என் நீண்ட நாள் ஆசை ஞாபகத்திற்கு வந்தது. சிறு வயதில் கிராமத்திற்கு போகும் பொழுது குளத்தில் இருந்து களிமண்ணை எடுத்து வந்து சட்டி , பாணை செய்து விளையாடியதுண்டு. களிமண்ணிலேயே தோசை கல், இட்லி தட்டு, டம்ளர், என்று செய்து காயவைத்து அழகு பார்ப்போம். இட்லி தட்டில் வைக்க களிமண் இட்லி கூட செய்வோம். அப்பொழுதிலிருந்தே எனக்கு குயவர்கள் வீட்டிற்கு சென்று பானை செய்யவேண்டும் என்று ஒரு ஆசை.
பானை செய்வதை விட அந்த மண்ணில் முழங்காலுக்கு கீழ்வரை மூழ்குமளவிற்கு மிதித்து பார்க்க ஆசை. அந்த மண்னை இரண்டு கை கொண்டும் குழைய குழைய பிசைய ஆசை. முழங்கை அளவிற்கு பூசிய களிமண்ணை மறுகை கொண்டு வழித்து போட ஆசை. இப்பொழுது தான் எங்கு பார்த்தாலும் களிமண் face pack, களிமண் soap, களிமண் paste, என்று விற்க கிளம்பிவிட்டார்களே. அதுமட்டுமா அடுப்பு கரித்துண்டுக்கும் அதே மெளசு. charcoal face pack, charcoal paste என்று விற்கிறார்கள். அழகிய ஓவியம் கூட இப்பொழுது charcoal painting, drawing என்று வந்துவிட்டது.
அது மட்டுமா பத்து விரல்களை அந்த குயவரின் சக்கரத்தில் பதித்து பானை வடிவமைக்கவும் ஆசை. நம் கைகளை வைத்து அழுத்தி பிடிக்கும் பொழுது அந்த சக்கரம் அழகாக சுத்துவதை பார்ப்பதில் ஓர் ஈர்ப்பு. பிள்ளையார் பிடிக்க அது குரங்கானது போல் ஆனாலும் பரவாயில்லை. இதை என்றாவது ஒரு நாள் என் வாழ்நாளில் செய்து பார்த்தே ஆகவேண்டும். முன்பெல்லாம் வடிவம் இழந்த பானைகளை மீண்டும் அழகிய பானை வடிவம் வரும் வரை வடிவமைப்பார்கள். இப்பொழுது அப்படி இல்லை. எந்த வடிவம் ஆனாலும் அதற்கு அழகாக வண்ணம் பூசி கார் விற்பனைக்கூடத்தில் இடுப்பை நெளித்துக்கொண்டு நிற்கும் பெண்ணைப்போல் அழகாக நிற்கவைத்து விடுகிறார்கள். எனவே எனக்கு அழகான பானைதான் செய்யவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. கூடிய விரைவில் என் ஆசையை தீர்த்துக்கொள்வேன்.
இந்த கால பிள்ளைகளுக்கு இப்படி எல்லாம் ஆசை இருப்பதாக தெரியவில்லை. இல்லை நாம் தான் அதை எல்லாம் அவர்களுக்கு காண்பித்து கொடுப்பது இல்லையா? எல்லோர் கைகளிலும் தான்
கைத்தொலைபேசி தவழ்கிறதே. அவர்கள் இரண்டு கட்டைவிரல்களை மட்டுமே பயன்படுத்தி விளையாடுகிறார்கள். மண்னை பிசைந்து விளையாடி செலவில்லாமல் நம் motor skills வளர்த்துக் கொண்டோம். இன்றோ motor skill development என்பதற்காக பிரத்தியேக விளையாட்டுப் பொருட்களையும், அதற்கான தேர்ச்சி மையங்களுக்கும் குழந்தைகளை கூட்டிக்கொண்டு அலைகிறோம். மீண்டும் மீண்டு வருமா அக்கால விளையாட்டுகளும், அந்த குழந்தை பருவமும்???

Saturday, September 8, 2018

The trail on my face!!

The trail on my face!!
Dark clouds spread across the sky.
Small droplets of rain falling on the ground.
Pleasant smell of grass mixed in the breeze.
Unfolded Umbrella held tight in one hand,
not to let it fly away.
A black handbag hanging from the shoulder,
held with the other hand to control its swing.
Footsteps kept with caution and care,
not to slip a bit or have a fall.
Same clouds , same rain, same smell of grass,
did I experience many many years back,
some time while cycling back home from school.
with one hand holding the hand bar
and the other hand wiping away the rain drops
that fell on my eyebrows and slid into my eyes.
The rain drops did wet my cheeks and chin.
Ran through my neck and wet me deep within.
Chatting along the way,
unmindful of the rain I cycled back home
with ease and no pain.
No fear of slipping or falling.
Same clouds, same rain, same smell of grass
did I experience ,
sometime while walking back home from school.
Books hugged tight and close to my chest
like when holding your loved ones with love and care.
Not to let them get wet and tear apart.
Where they held tight to keep them safe
Or to keep myself safe from prowling eyes?
Never did I care of getting wet or falling sick.
Walked along with friends joking and laughing.
Today When the floor is wet
My toes hold my slippers tight.
My eyes looks for non skid floors and tiles.
Each step is taken after much calculation.
My pace is slow and each step leaves a deep foot print.
My eyes look for pits and holes.
Wet leaves and flowers grab my attention,
warning me to walk with caution.
Is this some natural instinct or the over precaution
that comes with age?
My pace may be slow,
My steps may be deep,
But still I enjoy the trail that rain leaves on my face.........

Thursday, September 6, 2018

காலச் சக்கரம்

........





காலச் சக்கரம்
அரிசியில் கல் இருக்கிறதா என்று பார்க்க கண்களுக்கு கண்ணாடியின் உதவி வேண்டும் வயது வந்தாகிவிட்டது. நினைத்துக் கூட பார்க்கவில்லை இது இவ்வளவு சீக்கிரம் வரும் என்று. இப்பொழுதுதான் அம்மா அரிசியில் கல் பொறுக்க கண்ணாடியை எடுத்து வா என்று கூறியது போல் உள்ளது. அதற்குள் நான் என் கண்ணாடியை தேடும் நேரம் வந்துவிட்டது. அம்மா கண்ணாடி போட்டு அரிசியை துழாவியதை ஒவ்வொரு முறை பார்த்த பொழுதும் மனதுக்குள் ஒரு திக் வந்து மறைந்ததுண்டு. இன்று என் மகளும் அதே அதிர்ச்சியில் உரைகிறாள். காலச் சக்கரம் வேகமாகவே சுழல்கிறது. என் தாய் கடந்து வந்ததை நான் கடப்பதைப் போன்று அவளும் நான் கடந்து வந்ததை கடக்கும் நாள் வரும். அக்காலத்திற்குள் என்னால் முடிந்த கற்களை நான் பொறுக்கியாக வேண்டும் விரைவாக..













Mom and Rishi

Mom and Rishi #
Mom made momos for dinner and with much excitement called Sruthi and Rishi to enjoy them. When she tried to take it out of the steamer she had some difficulty in doing it .Still she managed to get it out.She served for both of them and waited for the feedback.
Mom: Sruthi how does the momos taste? only thing is it got stuck a little bit in the steamer.
Sruthi: It's ok mama. It tastes good.
Mom: Rishi , how about you? do you like them?
Rishi: Ya mama it tastes good but I have a doubt. why are the MOMOS BOTTOMLESS?
Mom stared at him for a second and shook her head with disappointment.
Mom: That's because I tried making them with spring roll sheets and not wanton sheets. May be I should have used some butter paper .
Rishi: It is ok mama. Though they are bottomless I can scoop it and eat . Just one suggestion.
Thinking that Rishi was going to give her a tip about how to make better momos,
Mom: What is it Rishi?
Rishi: Next time when you try to make momos and if they turn out to be bottomless just dont call them momos. Name them as CHINESE CHAPATHY. Anyways we are going to scoop them and eat right?????
Mom just sat there for few second as if in meditation. Rishi walked away with his empty plate. Anyways mom was in a way happy that the bottomless momos were enjoyed by her kids.