Wednesday, September 26, 2018

தொட்டாச்சிணுங்கி




தொட்டாச்சிணுங்கி
துழாவும் பார்வை
அனு அனுவாய்
துளைக்கும் போதும்,
சுடச் சுடச்
தீயினை கக்கும்
வார்த்தையினை
காதினிலே
கேட்கும் போது,
தேவையான நேரத்தில்
தேவையில்லா
அர்த்தமற்ற
மெளனம்
நிலவும் போதும்,
உரிமையில்லா
விரல் நுனி
உரிமையேந்தி
உரசும் போதும்,
கூனிக் குருகி
கூட்டுக்குள் நத்தையாய்
தன்னை சுருக்கிக் கொள்ளும்
ஒவ்வொரு பெண்ணும்
தொட்டாச்சிணுங்கி தான்.

No comments: