Wednesday, November 18, 2015

தாமரை இலைகள்

விபச்சார
குளத்தில்
மிதந்தாலும்
நாங்களும்
தாமரை
இலைகள் தான்
அந்த ஒரு
சூரியனுக்காக
தினம் தினம்
முகம் மலர்கிறோம்
பின் மீண்டும்
மடிகிறோம்........

Sunday, November 15, 2015

உயிரா உரமா?

9/11,26/11,13/11
உலக
பெரு நகரங்களில்
பறிக்கப்பட்ட
உயிர்
மட்டும்
உயிரா?
தினம் தினம்
பசியிலும்
பட்டினியிலும்
வெள்ளத்திலும்
கடத்தலிலும்
பலாத்காரத்திலும்
சிசு வதைப்பிலும்
ஜாதி சண்டையிலும்
மதப் பிரிவினையிலும்
போரிலும்
ஆக்கிரமிப்பிலும்
அரசியல் வாதிகளின்
சுயநலத்தாலும்
பறிக்கப்படும்
உயிர் யாவும்
வெறும்
மண்ணுக்கான
உரமா??

Wednesday, November 11, 2015

கோலம் பேசியது




இரண்டு
ஆண்கள்
இருக்கும்
இவ்வீட்டில்
இரண்டு
நாட்கள்
ஆகியும்
மிதிபடாமல்
நான்
தப்பிப்
பிழைத்தேன்....
மனமிருந்தால்
மார்க்கமுண்டு,
பிறர்
கோலம்
அழியாமல்
காப்பதற்கு.....

Wednesday, November 4, 2015

வேற்றுமை

தன்
குழந்தையின்
சிறு கிறுக்கல்களும்
பெரும் ஓவியமாய்
தெரியும்
அப்பாவிற்கு
தன் மனைவியின்
பெரிய  கவிதையும்
சிறு கிறுக்கலாய்
தெரிவது எதனால்??

அவளை
போற்றி கொண்டாட
அவளப்பன்
இருப்பதாலோ???

Monday, November 2, 2015

எதை ரசிப்பது.....

வண்ண விளக்குகள்
தோரணமாய் ஜொலிக்க,
சந்தனமும்
குங்குமமும்
வரவேற்க,
பூக்கள் மனம்
வீடெங்கும் வீச,
தாம் சிருஷ்டித்த
பொம்மைகளுடன்
விளையாட
கடவுள்
யாவரும்
வீடுதோரும்
கொலுவில் வீற்றிருக்க,
சொர்கமே
பூலோகம் வந்ததோ
என்று புத்தி நிணைக்க,
இதைகான வந்த
கண்களுக்கு
கொலுவில் அமர்ந்திருக்கும்
கலைவண்ணமிகு
பொம்மைகளை கண்டு
ரசிப்பதா
அல்ல
வண்ண உடையுடுத்தி
அலங்காரமாய்
கொலு காண வந்த
அழகு
பதுமைகளாய்
உலாவரும்
உயிர் ஓவியங்களை
கண்டு ரசிப்பதா
என்று
சந்தேகம்.
கண்கள் இரண்டாயினும்
காட்சி ஒன்றே,
மனதே நீயே
முடிவு செய்
எதை கண்டு ரசிப்பதென்று......