Sunday, November 15, 2015

உயிரா உரமா?

9/11,26/11,13/11
உலக
பெரு நகரங்களில்
பறிக்கப்பட்ட
உயிர்
மட்டும்
உயிரா?
தினம் தினம்
பசியிலும்
பட்டினியிலும்
வெள்ளத்திலும்
கடத்தலிலும்
பலாத்காரத்திலும்
சிசு வதைப்பிலும்
ஜாதி சண்டையிலும்
மதப் பிரிவினையிலும்
போரிலும்
ஆக்கிரமிப்பிலும்
அரசியல் வாதிகளின்
சுயநலத்தாலும்
பறிக்கப்படும்
உயிர் யாவும்
வெறும்
மண்ணுக்கான
உரமா??