Saturday, April 29, 2017

Rishi n me

Rishi: Ma are you sure Rahul Gandhi and you share the same date of birth?
Mom: Yes Rishi
Rishi: But you are smarter than him ma.
Mom: So what do you mean?
Rishi: you have a degree and he is a Harvard drop out
Mom: Ok . So?
Rishi: Look where he is and where you are?
Mom: He is in Delhi and I am in the kitchen in Singapore
Rishi: Ma if a man of limited intelligence can try to be so famous why can't you do something?
Mom: What do you want me to do Rishi?
Rishi: Why dont you become a full time author?
Mom: Rishi its time for you to go and sleep. Good night.

Tuesday, April 25, 2017

கானல் நீர்

காணும் இடமெல்லாம்
கானல் நீர் தெரியுதே!
சுட்டெரிக்கும் வெயிலிலே
கானல் நீரும்
ஆவியாய் போகுதே!

கானல் நீர் மட்டும்
காணும் நீர் ஆகுமானால்
தார் ஒட்டிய
கரும்பாதத்திற்கு
ஓடை நீராய் ஆகாதோ?
பள பளக்கும் கண்ணாடியாம்
கானல் நீர் கண்டு
முகம் பார்ப்போர் யாருமுண்டோ?
உயர பறக்கும் பறவை கூட
தாகம் தனிக்க
ஓர் நிமிடம் கீழே வந்து
ஏமாந்து போனதை பார்த்தது யார்?
நாக்கு தொங்கி எச்சில் ஊற்றி
மூச்சு இரைக்க ஓடிவந்த
நாய் கூட நக்கி பார்த்து
சுட்டுக் கொண்டது தன் நாக்கை!
எடுத்து வைக்கும் அடுத்த அடி
சறுக்கும் என
பயந்து பயந்து
அடி வைப்பார் சிலர் இங்கே!
வாகனத்தில் போனாலும்
வேகமாய் போனால்
நடப்போர் மீது
அள்ளித் தெளிக்கும்
தண்ணீர் என
மெதுவாய் போவோரும் இங்குண்டு!
கானல் நீர் மீது
காதல் கொண்டு
கவி பாடும் கவிஞரும் சிலர் உண்டு!
கானல் நீர் மட்டும்
காவிரி நீர் ஆனால்
காட்சி பிழை மறையுமே
சிவ கடாட்சம் கிட்டுமே!!!

Thursday, April 20, 2017

எலும்பொன்று இருந்திருந்தால்

இந்த நாக்கிற்கு
எலும்பொன்று இருந்திருந்தால்
மொழி என்று ஒன்று
பிறந்து இருக்குமா?
இத்தனை பிரளுமா?
இவ்வளவு
குட்டிக்கரணம் அடிக்குமா?
முப்பத்திரண்டு அசுரர்கள்
காவல் இருக்கையிலும்
தன் போக்கிற்கு
உலா வருமா?
அறுசுவையை தான்
சுவைக்க முடியுமா?
மூக்கின் நுனியை
தொட முயற்சிக்குமா?
வறண்டு போன
உதட்டு சுவர்களுக்கு
தண்ணீர் தான் பாய்ச்சுமா?
தெரிந்துத்தான் படைத்தானோ
நரம்பில்லா எலும்பில்லா
நாக்கை!
எளிதாய் போனது
கொடுத்த வாக்கை
பறக்கவிட .............

Wednesday, April 12, 2017

Nature's gift

My dear friend,
Yes ! I did see the showers
that wet your garden!
I could smell and feel
the essence of rain
pass through my nostrils
and fill my air bags!
Longing to hold it
for ever and ever
half heartedly
I am letting it escape !
The wetness of the grass
soothes and tickles
my feet!
The sight of the two elephant dolls
drenched and dancing in the rain
captures my eyes and heart!
Makes me feel a child again
to get wet with them and dance in the rain!
How can I close my lids
from the sight of those
lovely water laden petals
of the white flowers
hanging their heads
as if to lick the water drops
dripping from their face!
The lonely swing
swinging all alone
in the breeze
calls me loud to swing with her!
My heart slips at the
The shiny red floor
that reflects the sky
and who ever passes by!
For a short span of time
Did I travel heart and soul
to your abode to
live the life of
nature's gift!!!!

Tuesday, April 11, 2017

மழையாமே உன் வீட்டில்

மழையாமே உன் வீட்டில்?
உன் வீட்டு
மண்வாசனை
என் நாசி
உள் நுழைந்து 
நுரைஈரல்
முழுதும் நிரப்பி
பின் மெதுவாய்
வெளி வருகிறது!
உன் வீட்டு
நனைந்த புல்லின்
ஈரம் தான்
என் பாதம்
நனைக்கிறது!
உன் வீட்டு
மண் யானை
ஜோடியாய்
மழை நீரில்
குளிப்பது கண்டு
என் மனம்
இங்கே ரசிக்கிறது!
கொடியிலே
ஈரம் சொட்டச் சொட்ட
தலை கவிழ்ந்த
வெள்ளைப் பூக்கள்
என் கண் கவர்கிறது!
உன் வீட்டு
ஊஞ்சல் தனிமையில்
தான் ஆடி
எனை அங்கே
அழைக்கிறது!
கண்ணாடி
செந்தரையில்
என் மனம் வழுக்கியது!
மனக் கண்ணில்
நானும் தான்
அங்கே சில
நொடி வாழ்ந்து
முடித்தேனடி
தோழியே!!!

Friday, April 7, 2017

மக்கித்தான் போனோம்!

நேற்று ஒரு படம் பார்த்தேன். அதில் வந்த ஒரு டயலாக்--”அளவு சாப்பாடு 50 காசு, முழு சாப்பாடு ஒரு ரூபாய்.” இதை கேட்டவுடன் காதில் தேன் பாய்ந்தது போல் இருந்தது. அப்புறம் தான் தெரிந்தது காதில் தேன் பாய்ந்தால் அது பிசு பிசுப்பாக அல்லவா இருக்கும். காதில் எளிதாக எறும்பு போய் கடித்து விடாதா ? ஆனாலும் கேட்டவுடன் மனதில் ஒரு சந்தோஷம் ,ஆஹா அந்த காலம் தான் மீண்டும் வந்து விடாதா? என்று. அப்பொழுது என் தந்தை தொலைபேசியில் அழைத்திருந்தார். எதை எதையோ பற்றி பேசிக்கொண்டிருந்த அவர் கூறினார்,” என்னமா ஆஸ்பத்திரியில் ஒரு வெஜிடபிள் பிரியாணி எழுபது ரூபாய்க்கு விற்கிறார்கள். ரொம்ப காஸ்ட்டிலிமா,”என்றார். கேட்டவுடன் நான் சிரித்து விட்டேன். அவர் வடிவேல் ஸ்டைலில் ஷாக் ஆகிவிட்டார். எழுபதுகளில் இருக்கும் அவர் உணரவில்லை , போகிற போக்கை பார்த்தால் எழுபது ரூபாய் கொடுத்தால் சாப்பாடாச்சும் இப்பொழுது கிடைக்கிறதே, இன்னும் சிறிது காலத்தில் அவரின் பேரப்பிள்ளைகளுக்கு அது கிடைக்குமா என்பது சந்தேகமே என்ற உண்மையை! அரிசி முதல், காய்-கறி வரை பிளாஸ்டிக் ஆகி போய்கொண்டிருக்கும் காலத்தில் நாம் உழண்று கொண்டு இருக்கிறோம் என்ற உண்மையும் அதில் அடக்கம் !!
அதே படத்தில் வேறு ஒரு டயலாக்-”இந்த நாட்டில் இல்லை என்பதே இல்லாமல் போக வேண்டும்” என்று. கேட்டவுடன் சிரிப்பாகத்தான் வந்தது. இந்த நாட்டில் சில விஷயங்கள் இல்லாமலே போய் வருடங்கள் பல ஆகிவிட்டது. சுயநலம் இல்லா தலைவர்களும் பொதுநலம் பேணும் மக்களும் இல்லாமல் போய்விட்டார்கள். இப்பொழுது இதில் பல விஷயங்கள் சேர்ந்து விட்டது--மாசு இல்லா காற்று, சுத்தமான தண்ணீர், சத்தான உணவு(உண்மையான உணவு என்று கூட கூறலாம்). என் தங்கை கூறினாள்,”அக்கா முட்டை வாங்க கூட பயமா இருக்கு. பிளாஸ்டிக் முட்டைனு சொல்றாங்க.எதை தான் வாங்கி சாப்பிடுவது. பயமில்லாமல் எதை தான் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுப்பது என்று தெரியவில்லை,”என்று கூறினாள். நான் சொன்னேன்,”வெந்ததை திண்றுவிட்டு வேங்கடா என்று கூறவேண்டியது தான், வேறு என்ன செய்ய முடியும் நம்மால்?”
பழம் பெருமை பேசி காலத்தை வீணாக்காதீர்கள் என்று கூறுகிறார்களே, ஆனால் பழம் காலத்தை நினைக்கையில் வயிறு நிறையாவிட்டாலும் மனதாவது நிறைகிறதே!!நிகழ் காலத்தில் நம் மனமும் வயிறும் நிரம்பித்தான் வழிகிறது --எல்லா வித கழிவுகளாலும்........சுத்தமான உடலோடும் மனதோடும் வாழ நாம் வேறு கிரகத்தில் பிறந்து இருக்கலாம் என்று அஞ்சலி பாப்பா மாதிரி ஆசை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் நம்மை புடுச்ச கிரகம் இங்க வந்து பிறந்துட்டோம்.... எத்துனை நம்மாழ்வார்கள் பிறந்து மடிந்தால் என்ன? இந்த பூமி மக்கித்தான் போகப்போகிறது நம் உடலையும், மனதையும் போல........