Saturday, February 1, 2020

பெண்மையை புதைக்காதீர்....

காலை மணி ஒன்பது. சாலையில் ஒரே பரபரப்பு. ஒரு பேருந்து தன் முழு உடம்பையும் வேகமாக திருப்பாமல் மெல்ல மெல்ல கொஞ்சம் கொஞ்சமாக தன் உடலை அங்கம் அங்கமாக திருப்பி என்னை கடந்து சென்றது. பேருந்து போக வழி விட்டு விட்டு காத்து இருக்கையில் பேருந்தினுள் அழகாய் ஒரு கவிதை.
ஒரு தந்தை ,பேருந்தின் கடைசி இருக்கைக்கு முன் இருக்கையில் அமர்ந்து கொண்டு தன் முன்னே உள்ள இருக்கையின் கம்பியை தன் விரல் கொண்டு கவ்வி கொண்டு அமர்ந்திருந்தார். இரண்டு முழம் நீண்டு இருந்த அவர் கையில் தலை வைத்து சாய்ந்தபடி அவரின் மூன்று வயதிருக்கக்கூடிய பெண் குழந்தை அவர் மடியில் அமர்ந்து கொண்டு ஆனந்தமாய் உறங்கி கொண்டு இருந்தது. பேருந்து எப்படி போனால் என்ன, எப்படி வளைந்தால் என்ன ? என் தந்தையின் கை இருக்கிறது பக்க பலமாய் என்னை பாதுகாக்க என்ற நிம்மதியில் அந்த குழந்தை .
குழந்தை எழும் வரை அவர் கையை எடுக்க போவதில்லை அல்லது பேருந்து அவர் இறங்க வேண்டிய இடம் அடையும் வரை அவர் அசையப்போவதில்லை. தந்தையே தாயுமானார். கவிதையாய் தோன்றிய அந்த காட்சி என் மனதில் ஓவியமாய் பதிந்தது.இப்படித் தான் எல்லா குழந்தைகளும் தங்களின் தந்தையின் அரவணைப்பில் இருக்கும் வரை ஆனந்தமாய் உறங்குகிறார்கள்.....
உறக்கத்தை கலைத்து பயத்தை விதைக்காதீர்....உயிருடன் எரிக்காதீர்.....பெண்மையை புதைக்காதீர்....பெண் சுதந்திரத்தை பரிக்காதீர்....

No comments: