Saturday, September 28, 2019

சிறைபிடிப்பு!


https://www.facebook.com/dhanabalan.geetha/videos/10217219279007788/?t=0

சிறைபிடிப்பு!
தோழி உடன் வரவில்லை என வருத்தத்துடன் தனியாக நடந்தேன்! கவலைப்படாதே நீ போகும் தூரம் வரை உடன் வர நான் இருக்கிறேன் என்று கூடவே வந்தாள் அவள்! பேசிக்கொண்டே நடந்தோம். அனுப்பிய விக்ரம் நலமா என்றேன். புன்சிரிப்பு ஒன்று மட்டும் உதிர்த்து கூடவே அமைதியாய் நடந்தாள்! விடவில்லை நானும். ஏன் அவனை சிறைபிடித்தாய் என்றேன்.” பெண் என்றும் பாராமல் , என் அனுமதி இன்றி என்னை அணு அணுவாய் படம் பிடிக்க எதற்காக வந்தான்? அவனுக்கு சொந்தமில்லா என்னை படம் பிடிப்பது மட்டுமல்லாது அதை இந்த உலகிற்கே வெட்ட வெளிச்சம் போட்டு காட்ட ஏன் நினைத்தான்? உங்கள் பூமியில் வேண்டுமானால் ஒருவரின் உத்தரவு இன்றி படம் எடுத்து போடுவது சகஜமாக இருக்கலாம் ஆனால் எங்கள் இடத்தில் அது இழிவான செயல்,” என்றாள். அவளும் பெண் தானே! அவளின் சுதந்திரத்தில் தலையிடுவது தவறு என்பதை உணர்ந்த பின் அவளுக்கு பதில் ஏதும் கூறமுடியாமல் அமைதியாக நடந்தேன்! விக்ரமின் விமோச்சனம் யார் கையில் என்பது பிடிபடவில்லை! வீடுவரை கூட நடந்து வந்த அவளை வீட்டிற்குள் அழைக்க கோடி ஆசை இருந்தும் அவளை வாசலிலேயே விட்டு விட்டு தனியாக வீட்டிற்குள் சென்று கதவிற்கும் மனதிற்கும் தாழ்பாழ் இட்டு சன்னல் வழியே அவளை பார்வையாலே வழி அனுப்பி வைத்தேன்!

No comments: