Saturday, September 28, 2019

மாதுளை பரல்கள்!

மாதுளை பரல்கள்!
செக்கச் சிவந்த
செம்மாதுளையினை
உரித்தெடுத்து
சிந்தாமல், சிதராமல்
கிண்ணத்தில் நிரப்பும்
போதெல்லாம்
அன்று
மதுரையில் சிதறிய
கண்ண்கியின்
பொற்சிலம்பும்,
அதனின்று தெரித்து சிதறிய
மாணிக்க பரல்களும்
ஏனோ மனக்கண் முன்
வந்து போகிறது!
மாதுளையின்
செஞ்சாறு கையில்
தெரிக்கும் பொழுது
அது தனக்கிழைக்கப்பட்ட
அநீதிக்கு அவள் வடித்த
ரத்தக்கண்ணீரோ
என்று மனம் பதபதைக்கிறது!
எத்துனை தலைமுறை ஆகும்
இந்த ரத்தக்கறை போவதற்கு
பழி தீர்வதற்கு!

No comments: