Monday, May 6, 2019

தூரத்து மின்னல்!

தூரத்து மின்னல்!
மின்சார ஒளி வெள்ளத்தில்
மூழ்கி கிடக்கும்
வானுயர்ந்த 
தீப்பெட்டி
அடுக்குகளுக்கிடையே
தன் ஒளி வீசினால்
மங்கலாய் தெரியுமென
நினைத்து
தூரமாய் போய்
முனு முனுக்காமல்
அமைதியாய்,
தனியாக
மினுக்குகிறாள்
தூரத்து மின்னல்!!!
அவள் கன்னச் சிவப்புத்தான்
ஒளியாக வீசுகிறதோ?
கண்ணின் ஒளியுந்தான்
வெள்ளி கம்பியாய்
ஒளிர்கிறதோ?
அவள் மெளன சிரிப்புத்தான்
விட்டு விட்டு மிளிர்கிறதோ?
தன் அழகில் தானே மயங்கி
வெட்கித்தான் மறைந்தாளோ?

No comments: