Monday, May 6, 2019

மழை

https://www.facebook.com/dhanabalan.geetha/videos/10216097358920487/

சட சட என்று கொட்டும் மழையை பார்த்தவுடன், “ஓஹோ மேகம் வந்ததோ” என்று மெளன ராகம் ரேவதியை போல் மழையில் தொப்பையாக நனைந்து ஆட வேண்டும் என்று தான் ஆசை. இந்த வயதில் வழுக்கி , கிழுக்கி கீழே விழுந்தால் ஓடி வந்து தூக்க யாரும் இல்லையே! கொடுத்து வைத்தது அவ்வளவு தான் என்று சன்னல் வழியே பார்த்து மனதால் நனைத்து கொண்டேன் என்னை. மனசு அப்படியே பின்னோக்கி போனது......... பள்ளியில் இருந்து வரும் பொழுது மழை பெய்தால் ரெட்கார்ட் நோட்டுகள் நனையாதவாறு பார்த்துக்கொள்ள எடுத்த பிரயத்தனத்தை நான் நனையாமல் இருக்க எடுத்ததில்லை. சொட்ட சொட்ட நனைந்து , வீட்டுக்கு வந்தவுடன் அம்மாவிடம் பாட்டு வாங்கி கட்டிக்கொண்டு, அம்மா தரும் அந்த சூடான டிஃபனை உள்ளே தள்ளி விட்டு.... கரெண்ட் கட் ஆகுமா, இன்று படிக்காமல் தப்பிக்கலாமா என்று ஆவலுடன் எதிர் பார்த்து......ஆஹா அது ஒரு கனாக் காலம்....

No comments: