Monday, May 6, 2019

வண்ணம்

நம்புங்கள் நாங்கள் 
யாவரும் ஓர் தாய்
பிள்ளைகள் தான்!
வண்ணம் வேறு பட்டாலும்
எண்ணம் வேறு பட்டாலும்
எங்கள் வேர் ஒன்றே!
இந்த வண்ணம் யாவும்
எங்கள் மேல்
செயற்கையாய்
பூசப்பட்டவை!
எதற்காகவும்
எங்கள் பிறப்பின் மேலோ
எங்கள் படைப்பின் மேலோ
உங்களுக்கு சந்தேகம் வேண்டாம்!
ஆம் நாங்கள் யாவரும்
ஓர் தாய் பிள்ளைகள்!!!

No comments: