Monday, May 6, 2019

நூல் பிடித்தது போல்
வரிசையாய் விளக்கின் ஒளி!
கடலுக்குள் ஓர் நகரமோ?
கண் விரித்து வியக்கின்றேன்!
மூச்சு விடாது 
அலையின் கச்சேரி!
எல்லா வாத்தியமும் அக்கடலின் உள்ளே!
ஊர்ந்து வரும் ஒளி
கச்சேரி கேட்க வரும்
நிலவொளியோ என்று நினைக்கையில்
தப்புத்தாளமாய் அருகில் கேட்கிறது
வானில் பறக்கும்
வானூர்தியின் இரைச்சல்!

No comments: