Friday, January 26, 2018

வாசம்!

வாசம்!
தோழி,
ஒவ்வொரு நாளும் நீ,
பூசைக்கு பூக்கள் பறிக்கும் போதும்,
ஒவ்வொரு பூவிலும்
பூவின் வாசம் தவிர்த்து
நாள் தவறாமல்
உன் தாயின் வாசம்
உணர்ந்தாய் என்றாய்!
பூக்கள் சூடிய
உன் தாயின் முகம்
என் கண் முன்னே
கொண்டுவந்தாய்!
தாய் இழந்து
வருடங்கள் பல ஆயினும்
அவளின் வாசம்
உணரும் உன் உணர்வை,
பாசம் என்பதா?நேசம் என்பதா?
ஆசை என்பதா? அன்பு என்பதா?
தாய்மை என்பத? தவிப்பு என்பதா?
ஏக்கம் என்பதா? சோகம் என்பதா?
கவிதை என்பதா?பக்தி என்பதா?
கேட்டவுடன் மெய் சிலிர்த்து போனேனடி தோழி,
விழி ஓரம் தேங்கிய இரு சொட்டு கண்ணீரை
வழியாமல் காத்திடவே
உள்ளிழுத்த பெருமூச்சில்,
வருடங்கள் பல பழகிய
நம் நட்பின் வாசம் உணர்ந்தேனடி!
அதில் உன் வாசம் உள்ளதடி!
இது நான் வாழும் வரை
என் நாசி தொட்டு போகுமடி!!!!

No comments: