Tuesday, January 16, 2018

தொட்டாச்சினுங்கி





நான் தொட்டதெல்லாம்
பொன்னாகும் என்று
அம்மா சொன்னது
பொய்யானது,
என் விரல் தீண்டியவுடன்
தொட்டாசினுங்கி சுருங்கியபோது!
ஒரு செடி தான் என் தீண்டல்
பிடிக்காமல் சுருங்கியதோ என்று
அருகில் இருந்த வேறு
செடிகளை தடவி நின்றேன்.
அவையும் தன் உடல் குருக்கி
கண்மூடி
தலை சாய்ந்து
உடல் தோய்ந்தன...
என் மூச்சுக் காற்றுக்கூட
அனலாய் அடித்தது போலும்.
நான் அருகில் நின்றவரை
சுருங்கி, சினுங்கிய
தொட்டாச்சினுங்கி
நான் அவ்விடம் விட்டு
நகர்ந்தவுடன்
நெட்டி முறித்து,
சோர்வு தளர்ந்து,
மீண்டும் கண் விழித்து
வானம் பார்த்தது.......
அனுமதி இன்றி
தீண்டினால்
தொட்டாச்சினுங்கி கூட
தற்காலிக மரணமடையும்......


No comments: