Saturday, August 31, 2019

காலையில் வந்த call...

காலையில் வந்த call......
காலங்காத்தால நெருங்கிய தோழியிடம் இருந்து call வந்தவுடன் அலறி அடித்துக்கொண்டு கைப்பேசியை எடுத்துப் பேசினேன்.
தோழி கேட்டாள்”ஏய் இன்றைக்கு பெளர்ணமியாச்சே உடனே நீ எதையாவது எழுதறேனு கி(குழ)ளம்புவியே அதான் காலைலேயே சுதந்திர தின வாழ்த்து சொல்லலானு கூப்டேன்” என்றாள்.
என் mind voice சொன்னது” கீதா நல்ல வேளை நீ எதையோ எழுதுவனு சொன்னா கிறுக்குவனு சொல்லல. free ஆ விடு. போற போக்க பாத்தா free ஆ ticket அனுப்பி பெளர்ணமிக்கு பெளர்ணமி ஏர்வாடிக்கு அனுப்ப பல பேர் ரூம் போட்டு யோசிக்கறாங்க போல. சுயமா சிந்திகறத கூட சுதந்திரமா எழுத முடியாத போது சுதந்திர தின வாழ்த்துக்கள் எதுக்கு?????”
கொஞ்சம் நேரம் கழித்து எழுத்துச்சுதந்திரம் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன்.இப்பொழுது இருக்கும் கால கட்டத்தில் நாம் நம்முடைய எழுத்து சுதந்திரத்தை எப்படி எல்லாம் தவறாக பயன் படுத்துகிறோம்? எதை வேண்டுமானாலும் எழுதுகிறோம். அதில் உண்மை இருக்க வேண்டும் என்பதில்லை. அடுத்தவர் புண்படுவார் என்று நினைப்பதில்லை. அழகான மொழி விடுத்து எப்படி வேண்டுமானாலும் வக்கிரமாக ஆபாசமாக எழுதலாம் என்றாகி விட்டது.எழுத்து என்பது நம் உணர்வை மட்டும் அல்ல நாம் யார் , எப்படி பட்டவர், நம் குணாதிசயங்களையும், நம் சிந்தனையையும் வெளிக்கொணரும் ஒரு கருவி. இதை மனித குல முன்னேற்றத்திற்காகவும் , சமுதாய நல்லினக்கத்திற்காகவும், மக்களின் ரசனையை மேம்படுத்தவும் , ஒரு உயரிய சிந்தனையில் பயன் படுத்துதல் அவசியம். எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று வாழ்வதை விட இப்படித்தான் வாழ வேண்டும் என்று வாழ்வதே நாம் சுதந்திரம் பெற்றதற்கான உண்மையான அர்த்தம். இதனை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து நாம் பேசுவதற்கு முன் யோசித்து அதற்கு ஒலிவடிவம் கொடுப்பது எப்படி நல்லதோ அப்படியே நம் சிந்தனைகளுக்கு எழுத்து வடிவம் கொடுக்கும் முன் , சிற்பி ஒருவன் தேவை இல்லாத கற்களை செதுக்கி அழகிய சிற்பத்தை செதுக்குகிறானோ அப்படி எழுத்துச் சிற்பத்தை செய்ய முற்பட வேண்டும்.
இந்த சுதந்திர தின நன்னாளில் நாம் ஒவ்வொருவரும் எழுத்துச் சுதந்திரத்தை பயனுள்ளதாக பயன்படுத்த என் வாழ்த்துக்கள்💐💐

No comments: