Saturday, August 31, 2019

அத்தி வரதா....

அத்தி வரதா....
சிறு வயதில் சுதந்திர தினம்
அணிவகுப்பை நேரில் சென்று பார்க்க ஆசையாக இருக்கும். நாம் எங்கே டெல்லிக்கு போவது பார்ப்பது.மறுநாள் நாளிதழை திறந்து வைத்துக்கொண்டு படங்களை பார்த்து ரசிப்பதுண்டு. பின் தொலைகாட்சி பெட்டி வாங்கியவுடன் “ஆஹா நேரில் சென்று பார்த்தால் கூட இப்படி தெளிவாக பார்க்க முடியாது போல இருக்கிறதே” என்று தோன்ற ஆரம்பித்தது. இதைப் போலத்தான் யார் இறந்தாலும், எந்த விழா விளையாட்டு போட்டி ஆனாலும் தொலைகாட்சி முன் பிடித்து வைத்த பிள்ளையார் மாதிரி உட்கார்ந்து பார்ப்பதாகி விட்டது. இதே தான் அத்தி வரதரைப் பார்க்க வேண்டும் என்று தோன்றிய போதும் தோன்றியது. அங்கம் அங்கமாக ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அலங்காரத்தில் அழகாக கைதொலைப்பேசியிலேயே பார்க்க முடிகிறபொழுது எதற்கு இப்படி கூட்டத்தில் அடிபட்டு மிதிபட்டு பார்க்க வேண்டும் என்று தோன்றி விட்டது. கைபேசியில் ஜூம் செய்து மிக அருகில் பார்ப்பதை போன்று 3D எஃபெக்ட்டில் பார்க்க முடிகிறது. வரதரே இந்த கூட்டத்தை கண்டு மூச்சு முட்டுவார் போல. இவ்வளவு மனிதர்களையா நாம் படைத்தோம் என்று அவருக்கே சந்தேகம் வரும் அளவிற்கு நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக கூட்டம் அலை மோதுகிறது. அத்தி வரதரையே மனிதர்கள் வெளியிடும் கார்பண்டையாக்ஸ்சைட் வாயும் சுற்றுச்சூழலில் கலந்திருக்கும் துற்நாற்றமும் தாக்கி அவர் இதற்கு மேல் இந்த பூவுலகில் இருந்தால் நமக்கு ஆஸ்த்துமா வந்துவிடும்.
இனி தண்ணீருக்குள் ஓய்வு எடுப்பதே மேல் என்று ஓடி விடுவார் போல......அத்திப்பூ போல வராத வரதர் வந்திருக்கிறார் . ஏண்டா வந்தோம் என்பதை போன்று அவருக்கு தோன்றவிடாமல் கொஞ்சம் அவரை சந்தோஷமாக வைத்திருக்கலாம் போல... விருந்தும் மருந்தும் மூன்று நாள் தான் என்பது சரிதான்.தண்ணீரை விட்டு வந்தவுடன் படுக்க வைத்து ஓய்வெடுக்க வைத்தார்கள். பின் சில நாட்கள் கழித்து எழுந்து கால் கடுக்க நிற்க வைத்து விட்டார்கள். உன்னை பார்க்க வரும் நாங்கள் கால் கடுக்க நின்று தரிசனத்திற்கு காத்துக் கிடக்கும் பொழுது நீ மட்டும் ஒய்யாரமாய் படுத்திக் கொண்டு காட்சி அளிக்கலாமா என்பதை போல
உள்ளது. எது எப்படியோ வரதர் என் கைதொலைபேசியில் தினமும் எனக்கு அழகாக காட்சி அளிக்கிறார். கோவிந்தா கோவிந்தா🙏🙏
சிறு வயதில் சுதந்திர தினம்
அணிவகுப்பை நேரில் சென்று பார்க்க ஆசையாக இருக்கும். நாம் எங்கே டெல்லிக்கு போவது பார்ப்பது.மறுநாள் நாளிதழை திறந்து வைத்துக்கொண்டு படங்களை பார்த்து ரசிப்பதுண்டு. பின் தொலைகாட்சி பெட்டி வாங்கியவுடன் “ஆஹா நேரில் சென்று பார்த்தால் கூட இப்படி தெளிவாக பார்க்க முடியாது போல இருக்கிறதே” என்று தோன்ற ஆரம்பித்தது. இதைப் போலத்தான் யார் இறந்தாலும், எந்த விழா விளையாட்டு போட்டி ஆனாலும் தொலைகாட்சி முன் பிடித்து வைத்த பிள்ளையார் மாதிரி உட்கார்ந்து பார்ப்பதாகி விட்டது. இதே தான் அத்தி வரதரைப் பார்க்க வேண்டும் என்று தோன்றிய போதும் தோன்றியது. அங்கம் அங்கமாக ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அலங்காரத்தில் அழகாக கைதொலைப்பேசியிலேயே பார்க்க முடிகிறபொழுது எதற்கு இப்படி கூட்டத்தில் அடிபட்டு மிதிபட்டு பார்க்க வேண்டும் என்று தோன்றி விட்டது. கைபேசியில் ஜூம் செய்து மிக அருகில் பார்ப்பதை போன்று 3D எஃபெக்ட்டில் பார்க்க முடிகிறது. வரதரே இந்த கூட்டத்தை கண்டு மூச்சு முட்டுவார் போல. இவ்வளவு மனிதர்களையா நாம் படைத்தோம் என்று அவருக்கே சந்தேகம் வரும் அளவிற்கு நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக கூட்டம் அலை மோதுகிறது. அத்தி வரதரையே மனிதர்கள் வெளியிடும் கார்பண்டையாக்ஸ்சைட் வாயும் சுற்றுச்சூழலில் கலந்திருக்கும் துற்நாற்றமும் தாக்கி அவர் இதற்கு மேல் இந்த பூவுலகில் இருந்தால் நமக்கு ஆஸ்த்துமா வந்துவிடும்.
இனி தண்ணீருக்குள் ஓய்வு எடுப்பதே மேல் என்று ஓடி விடுவார் போல......அத்திப்பூ போல வராத வரதர் வந்திருக்கிறார் . ஏண்டா வந்தோம் என்பதை போன்று அவருக்கு தோன்றவிடாமல் கொஞ்சம் அவரை சந்தோஷமாக வைத்திருக்கலாம் போல... விருந்தும் மருந்தும் மூன்று நாள் தான் என்பது சரிதான்.தண்ணீரை விட்டு வந்தவுடன் படுக்க வைத்து ஓய்வெடுக்க வைத்தார்கள். பின் சில நாட்கள் கழித்து எழுந்து கால் கடுக்க நிற்க வைத்து விட்டார்கள். உன்னை பார்க்க வரும் நாங்கள் கால் கடுக்க நின்று தரிசனத்திற்கு காத்துக் கிடக்கும் பொழுது நீ மட்டும் ஒய்யாரமாய் படுத்திக் கொண்டு காட்சி அளிக்கலாமா என்பதை போல
உள்ளது. எது எப்படியோ வரதர் என் கைதொலைபேசியில் தினமும் எனக்கு அழகாக காட்சி அளிக்கிறார். கோவிந்தா கோவிந்தா🙏🙏

No comments: