Monday, November 7, 2016

துப்பட்டா பேசுகிறது!!

இரு தோள் தொட்டு,
தாய் மடி கிடந்த சேயாய்
நெஞ்சில் விரிந்து கிடந்ததும் உண்டு,


இருகை பின்னால் விழ 
அட்டிகையாய்
கழுத்தை தழுவியதும் உண்டு,


இரு கைகள்
முன்னே விழ
மாலையாய்
அலங்கரித்ததும் உண்டு,
சொர்ப்ப காலம்
குறுக்கு மாலையாய்
இடைத் தொட்டு
முடியுண்டு கிடந்ததும் உண்டு,

ஒர் கை முன்னும்
ஓர் கை பின்னும்
ஓர் தோளில் நீண்டு
உலா வந்ததும் உண்டு!

மழைக்கும், வெயிலுக்கும்
தலைக்கு
கவசமாகி போனதும் உண்டு, 

நனைந்த கைகளுக்கு

துண்டாய் இருந்ததும் உண்டு!

ஆனால் இன்றோ,
தோளுக்கு சுமையென
பெட்டிக்குள்
மடிந்து 
உறங்குகின்றேன் நான்!!!