Sunday, November 13, 2016

பணம்!!

நான்கு
நாட்களாக
எம்மூர்
பிணம் கூட
பணம் என்றால்
வாய் பிளக்க
மறுக்கிறது!

பணம்
பாதாளம் வரை
பாயுமாம்,
ஆம்
ஐந்நூறும் ஆயிரமும்
இங்கே
பாதாள சாக்கடை
வரை பாய்கிறது!!

மடியில் கனம்
மனதில் பயம்
சுகம்,சுயம்
இரண்டும்
இழந்து
வலம்
வருகிறது
மனித இனம்
இங்கு தினம்!

No comments: