Monday, November 14, 2016

காணவில்லை

கோவில் செல்லும் வழியில்
மர இடுக்கின் ஊடே தேடுகின்றேன்!
காணவில்லை அவளை,
திரும்பி வரும் பொழுது
சன்னல் வழி பார்க்கிறேன் ,,
காணவில்லை அவளை!
வீடு வரும் வழியில்
வழி நெடுகிலும் கழுத்து எலும்பு நோக
அன்னாந்து பார்க்கிறேன் அங்கும் இங்கும்,
காணவில்லை அவளை,
வீட்டின் அறையிலிருந்து
எட்டி எட்டி சன்னல் வழி தேடுகிறேன்
காணவில்லை அவளை!
கரும் போர்வைக்குள்
மறைந்து கொண்டாள்
அந்த பேரழகி நிலா.......
அருகில் வருவாள் என்றனர்
அவளோ தொலைவில் சென்று விட்டாள்
காத்துக்கிடக்கின்றன என் கண்கள்...
.வெளி வருவாளா? ஒளி தருவாளா?

No comments: