Sunday, November 27, 2016

வேதங்கள் பொய்பதில்லை!!

என் தாய்,
பெண்ணியத்தை
காதில்
வேதமாய்
ஓதினாள்!
நானோ,
காகிதத்தில்
வார்த்தையாய்
வார்த்தேன்!
என் மகளோ,
வாழ்க்கையாய்
வாழ்கிறாள்!
பாட்டி நான்கடி,
தாய் எட்டடி,
குட்டியோ
பதினாறடி!!
ஆம்
வேதங்கள்
என்றும்
பொய்பதில்லை!!

No comments: