Friday, April 29, 2016

அவதாரம்!!

மஞ்சள் ஆடை
உடுத்தி மங்களமாய்
ஜொலிக்கிறாய்,
கோபம் என்றால்
தீயை உமிழ்கிறாய்,
குளிர் காலத்தில்
செந்தனலாய்
அணைக்கிறாய்,
மழைக் காலத்தில்
ஒரு நாள்
உனை பார்க்காவிட்டாலும்
ஏங்கி தவிக்க வைக்கிறாய்,
உன் பார்வை
படும் இடம் யாவும்
உயிர் பயிரிட்டு
போகிறாய்,
சில நேரங்களில்
பருவமடைந்த
பெண்ணைப் போல்
மேக திரைக்குப்பின்
மறைகிறாய்,
உனக்கு இல்லை
வளர்பிறையோ, தேய்பிறையோ!
உன் அழகில்
கண் கூசி
மயங்கித்தானே
நாங்கள் இன்று வரை
வாழ்கிறோம்,

எப்படியும் மடியும்
மனிதன் மேல்
மரித்தல் இல்லா
உனக்கு ஏன்
இப்பொழுது
இவ்வளவு
கடுங்கோபம்?
எப்படியும்
எமை மாய்த்து விட
வாழும் இடம் யாவும்
பாலைவனமாய்
மாற்றி விட்டாய்,
காய் கனிகள்
யாவையுமே
பூ முதல் கருகச் செய்தாய்,

பூமித்தாயை அறியாமல்
அவமதித்தோம்,
உன் கோபம் நாங்கள்
உணர்ந்தோம்,
தவணையில்
எங்கள் தவற்றை
திருத்திக் கொள்ள
சந்தர்ப்பம் ஒன்று
வேண்டினோம்,
பட்டுத்திறுந்தா
எங்களை
சுட்டுத் திருத்த
நீ எடுத்த
இந்த அவதாரம்
என்று முடியுமோ?






2 comments:

Anamika said...

நெருப்பாய் தெறிக்கும் உன் எழுத்துக்கள்.

Living-in-hyd said...

Very nice - Ramanathan