Saturday, April 2, 2016

பொய் + மெய் = பொய்மை

அன்று
குழந்தையாய்
நீ கூறிய
பொய் கதைகள்
யாவும்
கேட்டு
பிற்காலத்தில்
படைப்பாளி
ஆவாய்
என பொய்யாக
வாய்பிளந்து
ரசித்தேன்,

விளையாட்டு
துப்பாக்கி
வைத்து என்னை
நீ சுட்ட பொழுது
பொய்யாக
செத்து விழுந்தேன்,
நீயோ
மெய்யாக
எனக்காக
அழுதாய்,

அலுவலகத்தில்
விடுமுறை
வேண்டி
பலமுறை
உனக்காக
விடுப்புக் கடிதத்தில்
நோயாளியானேன்,
பொய்யாக
எழுதியதற்கு
மெய்யாக
வருத்தப்பட்டாய்...


அப்பொழுதெல்லாம்
மீண்டு வந்த நான்,
இன்று
மெய்யாக
சாவின் விளிம்பில்
நிற்கிறேன்,
பொய்யாக கூட
ஒரு வார்த்தை
கரிசனமாக எனக்காக
கூற மனமில்லை உனக்கு...
மீண்டு வரும் எண்ணமும்
இல்லை எனக்கு......





No comments: