Monday, March 12, 2018

அலங்கோலம்!!




அழகாய் புள்ளி வைத்து போட்ட கோலத்தை
மறுநாள் வாரி எடுத்து 
குப்பை மாவாய் 
பார்க்கும் பொழுதே
மனம் வலிக்கிறதே,
ஒரு சிறு புள்ளியாய்
தன்னுள் தோன்றி
அழகாய் உருப்பெற்ற
ஆசைக் கருவை,
பத்து மாதம்
மனதிலும் உடம்பிலும் சுமந்து
அன்பு மகளாய் வளர்த்தப்பின்
கொடியவன் ஒருவன்
கூறு போட,
அவள் உரு தெரியாமல்
அணு அணுவாய்,
குத்துயிரும் கொலை உயிருமாய்
அலங்கோலமாய்
சிதைந்து கிடக்க,
அக் கோலமகள்
மாக்கோலமா என்ன
கூட்டிப் பெருக்கி
குப்பையில் போட்டுவிட்டு
வேறு கோலம் போட???


No comments: