Friday, July 5, 2019

தண்ணீர்

மூன்று வாரங்களாக அருவியாய், மழையாய்,ஆறாய்,ஓடையாய்,கடலாய்,ஆலங்கட்டியாய்,குளமாய்,ஏரியாய், எல்லாமுமாய் தண்ணீரின் அவதாரங்களை கண் குளிர பார்த்தாகிவிட்டது. ஒரு நிமிடம் கூட திகட்டவில்லை, சலிக்கவில்லை! அவற்றின் போக்கு “என் வழி தனி வழி” என்பதாக இருந்தது! அதன் வழியில் யாரும் குறிக்கிடவில்லை. அதுவும் யாருக்கும் தீங்கிழைக்கவில்லை. பார்த்த நொடியாவும் மனதில் சந்தோஷம் கரை புரண்ட போதிலும் எங்கோ ஒரு மூலையில் “ இத்தண்ணிக்கு ஏன் இந்த ஓரவஞ்சனை? எம்மண்ணில் ஓடி விளையாட ஏன் மறுத்து எங்கோ இப்படி தன்னிச்சையாய் ஓடிக்கொண்டிருக்கிறது? வா வா என்று விழிமேல் வழிவைத்து காத்திருக்கும் எம்மக்களை எப்பொழுது சென்றடைய போகிறது என்ற ஒருவித சொல்லத்தெரியாத தவிப்பு இருக்கத்தான் செய்தது.....என்று தணியும் எம் தண்ணீர் தாகம்??

No comments: