Saturday, June 1, 2019

#pray for Nesamani

நேசமுடன்
மணி அடித்து
பாசமுடன்
எனை
எழுப்பிய
என் கைதொ(ல்)லை பேசியின்
தலையில் ஓங்கி
அந்த சுத்தியலால்
ஓர் அடி அடிக்க
வேண்டும் என
ஆசை இருந்தும்,
நட்டம் எனக்குத்தானே
என உணர்ந்து
ஆசையுடன் அதை
கையில் எடுத்து
அமைதியாய் இருக்கும் படி
அனைத்து வைத்தேன்....
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகுமாம். வெட்டியாய் பொழுதை கழித்தாலும் அதில் கூட ஊரோடு ஒன்றி வாழ வேண்டுமாம். அறியாதாராக இருப்பினும் பிறர் வாழ நினைப்பது அவருக்காக ப்ராத்திப்பதும் தான் நம் இனமாம். ப்ரச்சணைகள் கோடி நம்மை சூழ்ந்திருப்பினும், சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே என்று நினைத்து வாழ வேண்டுமாம்.ஈரை பேனாக்கி, பேனை பெருமாள் ஆக்குவதும் ஓர் கலையாம்.பொய்யை நிஜமாக்கி , அதையே வம்பாக்கி மகிழ்வதும் பொழுது போக்காம். நேசமணிக்காக கூட்டு ப்ராத்தனையில் கலந்துகொ(ல்ல)ள்ள வில்லை என்றால் நாம் இரக்கமற்றவர் ஆகிவிடுமோமாம். தலைமை ஏற்கும் விழா ஓர் புறம், இங்கு தலை காக்கும் வேண்டுதல் மறுபுறம்...எந்தபுறத்தில் சேர்வதென்று அறியாமல் தன் வேலை செய்வதே நிதர்சனம்......
காலங்காத்தால இப்படி பிச்சுக்கிட்டு அலையவச்சுட்டாங்களே இந்த நேசமணி பிரியர்ஸ்....யார் இந்த நேசமணி, என்ன ஆனது இவருக்கு, எப்படி ஆனது என்று நூறு கேள்விகள் மண்டையை குடைய அலுவலகத்தில் மும்முரமாய் வேலை செய்து கொண்டிருந்த கணவரை தொலைபேசியில் அழைத்து, என் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டது என் இன்றைய “மகிழ்ச்சி”. ஏதோ இன்றைக்கு என் ராசி நல்லதாக இருந்த படியால் கணவரிடம் வாங்கி கட்டிக்கொள்ளவில்லை. முக்கியமான விஷயங்களைக் கூட அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு வரும் வரை காத்திருந்து கேட்டுப் பழகிய எனக்கு இன்று இந்த “நேசமணி” அடித்த ஒலி என் காதை கிழித்து விட்டது. என் மண்டையில் சுத்தியலால் யாரோ அடித்து கொண்டே இருந்தது போல் இருந்தது. எதற்காக இவ்வளவு அவசரமாக, வேலை வெட்டியை விட்டு விட்டு தொலைபேசியில் அழைத்து என் சந்தேகங்களை விளக்கிக் கொண்டேன் என்று எனக்கே தெரியவில்லை. ஒன்றும் இல்லா விஷயத்திற்கு தூபம் போடுவதில் எனக்கும் பங்கு இருக்கிறதா? என்னவாக இருந்தாலும் இருக்கட்டும் நேசமணி சீக்கிரமே குணமாகி பத்திரமாக வீடு திரும்பினால் தான் பலருக்கு அவர்கள் வேலை ஞாபகத்திற்கு வரும்.....நாடு சுபிட்சம் பெரும்......
#pray for Nesamani

No comments: