Saturday, June 1, 2019

பிராத்தனை!!

பிராத்தனை!!
நல்லோர் வாழ்ந்திட வேண்டும்
தீயோர் திருந்திட வேண்டும்
பகை ஒழிந்திட வேண்டும்
பழி உணர்ச்சி விலகிட வேண்டும்
லஞ்ச லாவண்யம் அகன்றிட வேண்டும்
பொய்யும் திருட்டும் மறைந்திட வேண்டும்
தண்ணீர் பெருகிட வேண்டும்
விவசாயம் தழைத்திட வேண்டும்
ஏழ்மை இல்லா நிலை வேண்டும்
கல்வி செல்வம் கிட்ட வேண்டும்
மண்ணும், காடும் காத்தல் வேண்டும்
நோய் யாவும் போக்கிட வேண்டும்
ஊர் கூடி தேர் இழுத்திட வேண்டும்
நல்லாட்சி அமைந்திட வேண்டும்
பூமி குளிர்ந்திட வேண்டும்
மக்கள் மனம் மகிழ வேண்டும்
பாதுகாப்பாய் உணர வேண்டும்
ஒற்றுமை ஓங்க வேண்டும்
யாவரும் சமம் என்ற நிலை வேண்டும்
நன்மை என்றும் மலரவேண்டும்
நிம்மதியான வாழ்வு வேண்டும்

No comments: