Saturday, June 1, 2019

சுமை தாங்கி

பனிக்குடம்
உடைந்ததென்னவோ
கருவுற்றிருந்த
வானமாதேவிக்குத்தான்!
ஈன்றெடுத்தவளோ
பூமாதேவி!
அதுவும் ஒரு பிள்ளை
இரு பிள்ளை இல்லை!
ஓராயிரம் பிள்ளைகளை!
ஊரார் பிள்ளையை
ஊட்டி வளர்த்தால்
தன் பிள்ளை தானாய்
வளர்வது இதுதானோ?
அவர்களுக்குள்
என்ன ஒரு புரிதல்!
சுமக்கும் பாரம்
ஒருத்திக்கு
ஈன்றெடுக்கும் வலி
ஒருத்திக்கு!
மனிதன் சுகம் பெற
இவள் இருவரும்
சுமை தாங்கிகளாய்
ஆனார்களோ?

No comments: