Thursday, February 15, 2018

பால் நிலா




நேற்று அக்னி குஞ்சொன்றை 
முழுதாய் விழுங்கியவளாய்
செக்கச் சிவந்திருந்தவள்,
இன்று பாற்கடலில்
மூழ்கியவளாய்
பால் வண்ண மேனியளாய்
மிளிர்கிறாள்!!!
தனக்கு வந்த பால்குடத்தில்
பாதியை உன்னுடன்
அந்த கந்தனும் பகிர்ந்தானோ?
கடல் மீது தவழ்வாய்
என்று நினைத்திருக்கையில்
பால் தந்த தெம்பினில்
மரத்தின் மேல்
ஒய்யாரமாய் ஊஞ்சல் கட்டி
ஆடுகிறாய்.......

No comments: