Friday, July 23, 2010

இயல்பு

மூன்று வயதில்
பொம்மை பற்றி பேசினேன்
ஏழு வயதில்
தோழியைப் பற்றி பேசினேன்
பத்து வயதில்
சினிமா பற்றி பேசினேன்
பதிமூன்று வயதில்
காதலை பற்றி
பேச ஆரம்பித்தேன்
இருபது வயதில்
திருமணம் பற்றி பேசினேன்
இருபத்தைந்தில்
குழந்தை பற்றி பேசினேன்
முப்பதில்
அழகைப் பற்றிப் பேசினேன்
நாற்பதில்
கணவனைப் பற்றி பேசினேன்
ஐம்பதில்
மருமகளைப் பற்றி பேசினேன்
அறுபதில்
பேரக்குழந்தைகளைப் பற்றி பேசினேன்
எழுபதில்
சாவைப் பற்றி பேசினேன்
பெண்ணென்றால்
பேசவே பிறந்தது போல்..

6 comments:

Ungalranga said...

ஆஹா..!!

நல்ல கவிதை..!!

அதும் இந்திய பெண்கள் பேசாது இருக்கலாமா?!

ராம்ஜி_யாஹூ said...

கவிதை அருமை,

ஒரு வேளை வெளிநாட்டில் வசிக்கிறீர்களோ.
ஒரு பருவத்தில் கூட சக மனிதர்களை, ஆண்டவனை, இயற்கையை பற்றி பேச விருப்பம் இல்லை போல

priyamudanprabu said...

NICE

Geetha Ravichandran said...

உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி

வெங்கட் said...

உண்மையை ஒத்துக்கொண்டதற்கு நன்றி. பேசிப்பேசியே குட்டிச்சுவராகிற பெண்கள் நிறைந்த உலகம்தானே இது.

இந்த "பற்றி" என்பதற்கு என்ன பொருள்? கணவனைப் பற்றி, அதாவது "அவனுக்கு எதிராக", "அவன் செயல்களுக்கு எதிராக".. இப்படித்தானே.

Geetha Ravichandran said...

வெங்கட்--பேசினால் என்ன குட்டிச்சுவராகத்தான் ஆகவேண்டுமா என்ன?? பேசுவதினால் பகிர்தலும் நடக்கின்றது. அது ஆக்கப்பூர்வமானதாகவும் இருக்கிறது. பேசாமலேயே கழுத்தறுக்கும் ஆண்கள் நடுவே பெண்கள் பேசித்தான் சாதிக்க முடியும்.”பற்றி” என்றால் ஏன் நெகடிவாக யோசிக்கிறீர்கள்? குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும். கண்முன் நடக்கும் நல்லவைகளை பற்றியும் பேசலாமே!!!!