Thursday, July 15, 2010

பெருந்தன்மை

பக்கத்து வீட்டு
மர இலைகள்
என் வீட்டு காம்பவுண்டுக்குள்
விழுந்தால்
வாறிக்கொண்டு சண்டைக்குச் செல்வேன்.

மற்ற நாடுகளில் இருந்து
என் நாட்டுக்குள் கொட்டப்படும்
கழிவுகளை வரவேற்பேன்
காரணம்
“பாரின் திங்ஸ்”
* * *

4 comments:

Ravichandran Somu said...

கீதா மேடம்... வருக! வருக!

ரோஸ்விக் said...

வெளிநாட்டுக்காரன் என்னா கொட்டினாலும் சந்தோசம்தான்... அணு அளவின் கழிவானாலும்... அணுக்கழிவானாலும்...

:-)

அன்புடன் நான் said...

காட்டமான சிந்தனை.... கவிதைக்கு பாராட்டுக்கள்.

வெங்கட் said...

செருப்படி பட்டாலும் அந்த செருப்பில் Made in England இருந்தால் சந்தோஷம்தானே?