Tuesday, August 28, 2018

ஆற்றின் அழுகுரல்!

ஆற்றின் அழுகுரல்!
மணலை 
அள்ளி அள்ளி
மலடாக்கி விட்டாய்
எங்களை,
நாங்கள் விடும்
கண்ணீரே இன்று
செந்நீராய்
ஓடுதிங்கே
எங்கள் கண்ணீரில்
உப்பு இல்லையென்றா
கடல் நீரில்
கலக்கவிட்டாய்??
எங்கள் கண்ணீரும்
வற்றிபோகும்
நாள் வெகுதூரம்
இல்லையடா
மானிடா!
இதை உணர்ந்தாவது
எங்களை
மாணபங்கம் படுத்தாமல்
விட்டுவிடடா
மானிடா!!!!

No comments: