Friday, August 17, 2018

மழையே!!

மழையே!!
மனித மனதின்
வக்கிரத்தை சுத்தமாக
துடைத்து எடுக்கவா
இப்படி ஆத்திரமாய்
ஆர்பரிக்கிறாய்?
தடம் மாறிய எங்கள்
வாழ்வை
நன்னெறி பிறவாமல் தடுக்கவா
நீ பிரவாகமாகி
வழி மாறி ஆக்ரோஷமாய்
தலைவிரித்தாடுகிறாய்?
உன்னை வேண்டி
விரும்பியவர்களை
வேரறுத்து வெறுக்கச்
செய்துவிட்டு
நீ ஏன் இப்படி
போகும் திசையறியாது
அல்லாடுகிறாய்????
படித்த பாடத்தில்
படிப்பினை கற்றோம்.
இனி உன் வழி
நாங்கள் குறிக்கிடமாட்டோம்
அமைதியாய் நீயும்
உன் தாய் மடி சேர்ந்து
கண்ணுறங்கு மழையே!!

No comments: