Monday, May 14, 2018

ரசித்து கேட்டது:

ரசித்து கேட்டது:
“எங்க அம்மாச்சி ஒன்னு கீதா, சளி புடிச்சா வித்தியாசமா ஒரு வைத்தியம் பண்ணுண்டீ. நல்லா திக்க்க்கா, கெட்ட்டியா தேங்காப் பால எடுத்து வச்சுக்கும். நல்லா திக்க்க்கா காப்பி டிக்காக்‌ஷன் போடும். அந்த கெட்ட்டி தேங்காப்பாலுல இந்த திக்க்க்கா போட்ட காப்பி டிக்காஷன சுட சுட சுட ஊத்தி கலந்து குடிக்க சொல்லும் பாத்துக்க. நெஞ்சு சளி முழுசா வெளில வந்துடும். அப்புறம் இன்னொரு வைத்தியம் பண்ணும் பாரு. நல்லா காஞ்ச செகப்பு மொளகாவ ஒரு அஞ்சாரு எடுத்து நல்ல கொர கொர கொரனு அம்மில வச்சு அரைரைக்கும். சுட சுட வடிச்ச சாதத்துல அத போட்டு ரெண்டு ஸ்பூன் நல்லெண்ணய ஊத்தி பெசஞ்சி உருட்டி குடுத்து முழுங்க வைக்கும் பாரு. அத்துன சளியும் மூக்கு, வாய் வழியா வெளில வந்துடும். “தோழி சொல்ல கேட்டது.
. கேட்க கேட்க அந்த தேங்காய்ப்பாலின் கொழ கொழ தன்மை நாக்கில் ஒட்டியது. திக்கான காப்பி டிக்காக்‌ஷன் கருப்பாய் பயமுறுத்தியது.கொர கொர என்று அரைத்த மிளகாய் என் கைகளை எரியச் செய்தது.சுட சுட வடித்த சோற்றின் ஆவி என் கை விரள்களை சுட்டுத் தீர்த்தது. மொத்தத்தில் அவள் சொல்லி முடித்த போது எனக்கு உடல் முழுதும் வேர்த்து ஜுரம் விட்டது போல் இருந்தது.

No comments: