Sunday, December 3, 2017

என் குருவிக்கும் 
தண்ணீர் வேண்டுமாம்.
கூவி அழைத்து 
தண்ணீர் கேட்க
அதற்கு தெரியவில்லை!
என் மீது நம்பிக்கை
வைத்து காத்து இருந்தது!
செடிக்கு தண்ணீர்
விடும் பொழுது
தன் தவிச்ச வாய்க்கும்
ஒரு வாய் தண்ணீர்
கிடைக்கும் என்று
பொருமையாய்
பறந்து செல்லாமல்
காத்து இருந்தது!
ஒரு வாய் தண்ணீர்
என்ன, உனக்கு,
தண்ணீரால் அபிஷேகம்
செய்கிறேன் நான் இன்று!
தண்ணீர் உடம்பில்
உணர்ந்த மறுநொடியே
என்னைப் பார்த்து
சிரித்தது!
சிலிர்த்துக் கொண்டு
சிறகடித்து
பறக்க வில்லை!
மீண்டும் ஒரு குளியலுக்காக
காத்து இருந்தது!
நான் ஊற்றும் தண்ணீர்
செடியை மட்டுமில்லை
உன்னையும்
உயிர் பெறச் செய்யுமா?
நான் வெளியில்
செல்லும் போதெல்லாம்
முகம் மலர்ந்தபடி
என்னை நீ வழி அனுப்புகிறாய்.
உன்னிடம் விடைப் பெற்றப்
பின்னே நான் வெளி செல்கிறேன்.
நான் வீடு திரும்பும் போதெல்லாம்
முன் நின்று
அதே புன்னகையுடன்
என்னை வரவேற்கிறாய்!
உனக்கும் எனக்கும்
ஓர் இனம்புரியா
பிணைப்பு.
இது நான் உனக்கு
கொடுக்கும்
அந்த ஒரு சில
துளி தண்ணீரால்
ஏற்பட்ட
உறவா?

No comments: