Tuesday, April 11, 2017

மழையாமே உன் வீட்டில்

மழையாமே உன் வீட்டில்?
உன் வீட்டு
மண்வாசனை
என் நாசி
உள் நுழைந்து 
நுரைஈரல்
முழுதும் நிரப்பி
பின் மெதுவாய்
வெளி வருகிறது!
உன் வீட்டு
நனைந்த புல்லின்
ஈரம் தான்
என் பாதம்
நனைக்கிறது!
உன் வீட்டு
மண் யானை
ஜோடியாய்
மழை நீரில்
குளிப்பது கண்டு
என் மனம்
இங்கே ரசிக்கிறது!
கொடியிலே
ஈரம் சொட்டச் சொட்ட
தலை கவிழ்ந்த
வெள்ளைப் பூக்கள்
என் கண் கவர்கிறது!
உன் வீட்டு
ஊஞ்சல் தனிமையில்
தான் ஆடி
எனை அங்கே
அழைக்கிறது!
கண்ணாடி
செந்தரையில்
என் மனம் வழுக்கியது!
மனக் கண்ணில்
நானும் தான்
அங்கே சில
நொடி வாழ்ந்து
முடித்தேனடி
தோழியே!!!

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

எழுத்திலேயே மண் வாசனை வீசுகிறது
நன்றி சகோதரியாரே