Friday, March 10, 2017

நெடுந்தூர பயணம்!

நெடுந்தூர பயணம்!
நெடுவாசல் பயணம்!
தவித்த வாய்க்கு தண்ணீர் இல்லை இங்கே!
எரிவாய்வு எங்கே என்று ஒரு கூட்டம் அலையுது இங்கே!
தண்ணீர் இன்றி சாகும் நேரம் இதோ கண் முன் தெரியுது இங்கே!
செத்த பின் எரிக்க உதவுமாம் இந்த எரிவாய்வு அங்கே!
எரிந்த பின் நாங்களும் ஆவோம் ஒரு நாள் கரித்துண்டாய்!
மங்கையாய், மடந்தையாய்,அரிவையாய், கொழித்து செழித்த எம் நில மங்கை
இன்று வறண்ட சருமத்துடன் வரிகோடுகளுடன் பேரிளமங்கையாய் சுருண்டு உறங்குகிறாள்!
தவித்த வாய்க்கு எங்களுக்கு தண்ணீர் போதும்
பழரசம் வேண்டவில்லை நாங்கள்!
மரக் கறி வேண்டி பந்தியில் அமர்ந்த எங்களுக்கு
வேண்டாம் இந்த கரித்துண்டு!!
ஊன் இருக்க எம் நில மங்கையின் உயிரை உரிஞ்சாதீர்!
மக்கள் இன்றி மாநிலம் தான் செழிக்குமா?
சுடுகாடுகளில் மனிதன் தான் வாழமுடியுமா???

No comments: