Wednesday, February 15, 2017

காதலும் கடந்து போனது.....

அன்பர் தின
வாழ்த்துக்கள் இல்லை,
வாழ்த்து மடல்களும் இல்லை,
காதல் பாடல்கள் பகிர்தல் இல்லை,
இனிப்புக்கள் வழங்கப்படவில்லை,
வீதிகளில்ரோஜாக்கள் பூக்கவில்லை,
தெருவெங்கும் பூங்கொத்துக்கள் தொங்கவில்லை,
காதல் பற்றி போற்றி கொண்டாடவில்லை,
பூங்காக்களில் காதலர்களின் கூட்டம் இல்லை,
இத்தினம் எம் பண்பாடு இல்லை என்று
ஒரு கூட்டம் எழவில்லை,
வாழ்க்கையில் சுவாரசியம் மாறிக்கொண்டு தான் உள்ளது
பொது ஜனம் எதை சுவாசிக்கிறதோ
அதையே யாவரும் சுவாசிக்கிறோம்!
சில சமயம் நாம் நிர்பந்தமாக
ஊடகங்களினால் சில
அசுத்த காற்றை சுவாசிக்க வைக்கப்படுகிறோம்!
இன்று அரசியலே நம் எல்லோரின் சுவாசம் ஆனது,
காதலும் கடந்து போனது.......

No comments: