Sunday, August 14, 2016

மரண வலி-- கவிஞர் நா. முத்துக்குமாருக்காக என் அஞ்சலி......

எமனுக்கு சிறிது கூடவா
இரக்கம் இல்லை என்று
நிணைக்க வைத்த நாள் இன்று!

உறவாக இல்லை என்றாலும்
உயிர் பிரிந்த செய்தி
உள்ளத்தை அறுத்த நாள் இன்று!

உன் உயிரனு தாங்கிய குழந்தைகள் இரண்டு
அனாதைகள் ஆயின இன்று!!
நீ உயிர் தந்த பல நூறு பாடல்கள்
மீண்டும் உயிர் பெற்றன இன்று!!

கால தேவன் மட்டும்
இன்று உன்னை தன் கட்டுப்பாட்டுக்குள்
கொண்டு செல்லாமல் இருந்திருந்தால்
தமிழ் தாய் மடியில்
கொஞ்சி விளையாட
பல்லாயிரக் கவிதை குழந்தைகளை
நீ ஈன்றெடுத்திருப்பாய்!!

பூவுலகில் உன் கவிதைக் குழந்தைகள்
தாவி விளையாட இடம் இல்லை என்றா
அந்த சொர்கலோகம் சென்று விட்டாய்
பிரசவிக்க??

எங்கள் வீடுகளில் எல்லாம்
ஆனந்த யாழை மீட்டி விட்டு,
உன் வீட்டு யாழை மட்டும்
ஊமையாக்கி போனதேனோ??

செய்தி பல பொய்யாகி போன போது,
உன் மரண செய்தி மட்டும்
பொய்யாகி போகாதது ஏனோ??

குழந்தையாய் உன்னை விட்டு
உயிர் நீத்த உன் தாய் தேடி
நீ சென்று விட்டாயா??
நீ இழந்த தாய் மடியில்
அங்கேனும் அமைதியாய் நீ உறங்கிடுவாய்!!

அமைதியாய் நீ அங்கே உறங்கச் செல்ல
இங்கே உன் வீட்டு மழலைகள்
யார் மடியில் உறங்கிடுவர்?
தூக்கம் தான் தொலைத்தனரே
துக்கத்தில் மூழ்கினரே!!

No comments: