Wednesday, March 23, 2016

முத்துக் குளியல்!!

எழுத
எடுத்த பின் தான்
அறிந்தேன்
என் பேனாவிற்கும்
விக்கல் எடுக்கும் என்று!!
வார்த்தை ஒன்றும்
சட ,சட என பொழிய
மழையும் அல்ல,
சல , சல என ஓட
நதியும் அல்ல,
மட , மட என கொட்ட
மலை அருவியும் அல்ல,
வாளி கொண்டு இறைக்க
கிணற்று நீறும் அல்ல,
அது,
புத்தகக் கடலில்
முத்துக் குளித்தால்
கைக்குக் கிட்டும்,
நினைவில் நிற்கும்,
எழுத்தில் வாழும்!!!

No comments: