Monday, November 2, 2015

எதை ரசிப்பது.....

வண்ண விளக்குகள்
தோரணமாய் ஜொலிக்க,
சந்தனமும்
குங்குமமும்
வரவேற்க,
பூக்கள் மனம்
வீடெங்கும் வீச,
தாம் சிருஷ்டித்த
பொம்மைகளுடன்
விளையாட
கடவுள்
யாவரும்
வீடுதோரும்
கொலுவில் வீற்றிருக்க,
சொர்கமே
பூலோகம் வந்ததோ
என்று புத்தி நிணைக்க,
இதைகான வந்த
கண்களுக்கு
கொலுவில் அமர்ந்திருக்கும்
கலைவண்ணமிகு
பொம்மைகளை கண்டு
ரசிப்பதா
அல்ல
வண்ண உடையுடுத்தி
அலங்காரமாய்
கொலு காண வந்த
அழகு
பதுமைகளாய்
உலாவரும்
உயிர் ஓவியங்களை
கண்டு ரசிப்பதா
என்று
சந்தேகம்.
கண்கள் இரண்டாயினும்
காட்சி ஒன்றே,
மனதே நீயே
முடிவு செய்
எதை கண்டு ரசிப்பதென்று......

1 comment:

Anonymous said...

Good blog you have got here.. It's hard to find high quality
writing like yours these days. I truly appreciate individuals like
you! Take care!!

Look at my web-site - Free megabucks For Megapolis