Wednesday, October 28, 2015

உறவு பாலம்.....

உறவு பாலம்.....
முக நூலும்
வைபரும்
வாட்ஸ் ஆப்பும் 
இல்லையென்றால்
இன்று
பல
உறவுகள்
வால் அறுந்த
காற்றாடிகள் தான்....
சலைக்காமல்
தேடுகிறோம்
ஓயாமல்
அழைக்கிறோம்
கண்டதையெல்லாம்
பகிர்கிறோம்
ஓசி என்று
இருக்கும் வரை
அத்துனை பேரும்
கூட்ட கூட்டமாக
உறவு பாதையில்
பயணிக்கிறோம்
காசு மட்டும்
வசூலித்தால்
எத்தனை
பாதை
காட்டுப் பாதையாகும்?
கால் பதியா
பாதையாகும்??