Saturday, October 24, 2015

கொலு பொம்மைகள்

ஒன்பது நாட்கள்
வெளி உலகம் வந்து
தூய காற்றை
சுவாசித்து,
உற்றார் உறவினரோடு,
உண்டு மகிழ்ந்து
கூடி குலாவி
பாடி ஆடி
விடுதலை வாழ்க்கையை
சுவைக்க,
நாங்கள்
வருடத்தில்
முன்ணூற்றி ஐம்பத்தாறு
நாட்கள்
இருக்கிறோம்
சிறைவாசமும்
உண்ணா நோன்பும்
மௌன விரதமும்!!

ஆனாலும்
நம்பிக்கையுடன்
காத்திருப்போம்
வருடம் ஒருமுறை
கிடைக்கும்
அந்த விடுதலைக்காக!!!!!!

No comments: