Monday, March 9, 2015

யாதும் உருவே!!!

யாதும் உருவே!!!


தென்றலாய் வருடுவதா,
புயலாய் வீசுவதா?
அலையாய் தொடுவதா,
ஆழிப்பேரலையாய் அழிப்பதா?
நிலவாய் குளிர்விப்பதா,
சூரியனாய் சுட்டெரிப்பதா?
மயில் இறகாய் வருடுவதா,
தேளின் கொடுக்காய் கொட்டுவதா?
பூவாய் மனம் வீசுவதா,
முட்களாய் குத்துவதா?
தேனாய் இனிப்பதா,
எட்டிக்காயாய் கசப்பதா?
தீபமாய் ஒளிவீசுவதா,
மின்னலாய் குருடாக்குவதா?
புல்லாங்குழலாய் இசைப்பதா,
போர் முரசாய் முழங்குவதா?
ஆல விழுதாய் தாங்குவதா,
பாசக்கயிறாய் இறுக்குவதா?
குழந்தையாய் கொஞ்சுவதா,
ராட்சசியாய் மிஞ்சுவதா?
காளியாய் மாறுவதா,
காமாட்ச்சியாய் காட்சியளிப்பதா?
எல்லாம் உங்கள் கையில்.......

No comments: