Tuesday, January 31, 2017

தமிழண்டா!!

சட்டிக்குள் இருக்கும் நண்டுகள் அல்ல தமிழன், 
ஒரு பருக்கை ஆனாலும் தன் இனத்தை
கூவி அழைத்து பகிர்ந்துண்ணும் 
 காகைகள் என்பதனை
உலகிற்கு பறைசாற்றியாகிவிட்டது. 
விருந்தும் மருந்தும் நாண்கு நாட்களுக்குத்தான்!
உண்டது விருந்தோ மருந்தோ,
அதன் பயனை சிறிது காலம்
காத்திருந்துதான் உணரவேண்டும்.
இன்று முளைத்த காளானாகி போகாமல்,
ஆலம் விழுதுகளாய் படர்ந்து
தாய் மரத்திற்கு பளு சேருங்கள்.
இன்று விதைத்த விதையை
இன்றே அறுவடை செய்ய நினைத்தால்
அதில் மிஞ்சுவது பதரே !
காத்திருந்து அறுவடை செய்யும்
நெல்லே வீடு வந்து சேரும்.
அதுவே விளைநெல்லாய் மாறும்!
தேவை இங்கு குருதி சிந்தா உறுதி!
எரி நட்சத்திரம் அல்ல நீங்கள் !
நீங்கள்வழிகாட்டும் துருவ நட்சத்திரம்!
 அப்பனுக்கு சுப்பனாக இருந்தது சரிதான்
சுப்பனும் அப்பனாவான் என்பதை மறவாதீர்!
அனுபவம் தவிர்த சிறந்த ஆசான் இவ்வுலகில் இல்லை,
அவ்வாசான் கைப்பற்றி பொருள் உணர்ந்து,
நிலை உணர்ந்து
தன் நிலை மறவாமல்
அடுத்த அடி எடுத்து வையுங்கள்!
தாய் திருநாட்டை சிதறாமல் காத்திடுங்கள்!!

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

தமிழின் தலை நிமிர்ந்த தருணம் இது
மாணவர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள்
போற்றுவோம்