Wednesday, October 28, 2015

உறவு பாலம்.....

உறவு பாலம்.....
முக நூலும்
வைபரும்
வாட்ஸ் ஆப்பும் 
இல்லையென்றால்
இன்று
பல
உறவுகள்
வால் அறுந்த
காற்றாடிகள் தான்....
சலைக்காமல்
தேடுகிறோம்
ஓயாமல்
அழைக்கிறோம்
கண்டதையெல்லாம்
பகிர்கிறோம்
ஓசி என்று
இருக்கும் வரை
அத்துனை பேரும்
கூட்ட கூட்டமாக
உறவு பாதையில்
பயணிக்கிறோம்
காசு மட்டும்
வசூலித்தால்
எத்தனை
பாதை
காட்டுப் பாதையாகும்?
கால் பதியா
பாதையாகும்??

Saturday, October 24, 2015

கொலு பொம்மைகள்

ஒன்பது நாட்கள்
வெளி உலகம் வந்து
தூய காற்றை
சுவாசித்து,
உற்றார் உறவினரோடு,
உண்டு மகிழ்ந்து
கூடி குலாவி
பாடி ஆடி
விடுதலை வாழ்க்கையை
சுவைக்க,
நாங்கள்
வருடத்தில்
முன்ணூற்றி ஐம்பத்தாறு
நாட்கள்
இருக்கிறோம்
சிறைவாசமும்
உண்ணா நோன்பும்
மௌன விரதமும்!!

ஆனாலும்
நம்பிக்கையுடன்
காத்திருப்போம்
வருடம் ஒருமுறை
கிடைக்கும்
அந்த விடுதலைக்காக!!!!!!

Saturday, October 17, 2015

ஏற்றமெனில்.....!!!!

கோப்பைகள் வேண்டாம்,
வண்ணப் பட்டு சால்வைகள் வேண்டாம்,
மெடல்கள் வேண்டாம்,
பாராட்டு மழை பொழியவும் வேண்டாம்,
பத்திரமும் வேண்டாம்,
காசோலையும் வேண்டாம்
காகித பணமும் வேண்டாம்!!

என் சிறிய செயலுக்கு,
நான் சமைக்கும் உணவிற்கு,
நான் பாடும் பாட்டிற்கு,
நான் கிறுக்கும் கவிதைக்கு,
நான் தீட்டும் ஓவியத்திற்கு,
நான் உடுத்தும் உடைக்கு,
என் குழந்தை வளர்ப்பிற்கு,
நம் இல்லம் கோவிலாய்
இருப்பதற்கு,


 சிறு அங்கீகாரமே எனக்கு
பெரும் விருது,
அது இல்லையேல்
நான் வெறும் எருது...

ஒரு சிரிப்பு,
ஒரு அணைப்பு,
ஒரு சொல்,
கண்களில் ஆச்சரியக் ஒளி,
வாய் மொழியில் ஒரு சிறு
ஆச்சரியக் குறி!!


இவையாவும் உண்மையாக
இருக்கும் வரை,
போதும் இவை எனக்கு,
ஏணியில் எனை ஏற்றிவிட,
வாழ்வதனில் நாம் ஏற்றம் பெற.........